Skip to main content

கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம்... எழும் அடுக்கடுக்கான கேள்விகள்!!

Published on 26/12/2018 | Edited on 26/12/2018

 

Questions to arise

 

ஹெச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தம் என தெரிந்தே ரத்தம் கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்டதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரத்தம் கொடுத்த இளைஞர் பற்றிய தகவல்களும், அவர் தற்கொலை குறித்த செய்திகளும்,

 

கமுதி திருச்சிலுவையை சேர்ந்த 21 வயது மதிக்கத்தக்க வாலிபர் சிவகாசி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த தன் உறவுக்கார பெண்ணுக்கு ரத்தம் கொடுக்க முன்வந்த நிலையில், அந்த இளைஞர் வெளிநாடு செல்ல இருந்ததால் மதுரை வந்த அவருக்கு மீண்டும் ரத்த பரிசோதனை செய்யப்பட நேர்ந்தது. அந்த பரிசோதனையில் அவரது ரத்தத்தில் ஹெச்.ஐ.வி தொற்றுள்ளது உறுதியாக உடனே சம்பந்தப்பட்ட உறவினர்களுக்கும் மருத்துவமனை ஊழியர்களுக்கும் இதுபற்றி தெரிவித்துள்ளார் அந்த இளைஞர்.

 

இதனை அடுத்து ஹெச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தத்தை உங்கள் உறவுகார பெண்ணுக்கு செலுத்தவில்லை. அந்த ரத்தம் சாத்தூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுவிட்டது என தெரிவித்துள்ளனர் மருத்துவ ஊழியர்கள். ஆனால் இதற்கிடையில் சாத்தூரில் பரிசோதனைக்கு வந்த கர்ப்பிணி பெண்ணக்கு செலுத்தப்பட்டுள்ளது ஹெச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தம். ஹெச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தம் என தெரிந்தும் ரத்தம் செலுத்தப்பட்டதா? என பல கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தெரியாமல் நடந்த ஒன்றா? அல்லது தெரிந்தே நடந்த அலட்சியமா? மேலும் ரத்தத்தில் ஹெச்.ஐ.வி தொற்றுள்ளது என்ற தகவல் சம்பந்தப்பட்ட இளைஞர் மூலம் தெரியவர சிவகாசி மருத்துவ நிர்வாகம் சாத்தூர் மருத்துவமனைக்கு தெரிவிக்க வில்லையா? அந்த ரத்ததை உபயோகிக்க வேண்டாம் என்ற அறிவுறுத்தலை கொடுக்கவில்லையா? என பல கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்நிலையில் ஹெச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தத்தை கொடுத்த  கமுதி திருச்சிலுவைபுரத்தை சேர்ந்த அந்த 21 வயது இளைஞர்  எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்கொலைக்கு முயன்ற அவர் காப்பாற்றப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்ட்டுள்ளார்.  

 

அதாவது ரத்தத்தில் தொற்றுள்ளது தெரிந்து சம்பந்தபட்ட நபர் மருத்துவமனைக்கு தெரிவித்ததும், அந்த ரத்தம் சிவகாசி மருத்துவமனையில் இருந்து சாத்தூர் மருத்துவமனைக்கு சென்றுள்ளது. அங்கு ரத்தத்தை ரிசீவ் செய்த ஊழியர்கள் அதை வாங்கிய பின்னர் அதனை தொற்றுள்ள ரத்தம் என வகைப்படுத்தவில்லையா என்ற அடுக்கடுக்கான கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார். 

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; விசாரணைக் குழு அமைக்க முடிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Youth treatment incident decision to set up an investigation team

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்துள்ளார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலை அமைச்சர்  மா. சுப்ரமணியன் தெரிவித்தார். இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.