Skip to main content

கடலில் மிதந்த உயர் ரக போதைப் பொருள்... போலீசிடம் சிக்கிய ஆறு வாலிபர்கள்!

Published on 23/12/2021 | Edited on 23/12/2021

 

High quality drug floating in the sea ... Six teenagers caught by the police

 

தூத்துக்குடி நகரில் முக்கிய போதை சரக்கு விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட எஸ்.பி.யான ஜெயக்குமாருக்கு தகவல் போயிருக்கிறது. அலர்ட்டான எஸ்.பி., நகரின் மத்திய பாக இன்ஸ்பெக்டரான ஜெயப்பிரகாஷ் தலைமையில் தனிப்படையை அமைத்திருக்கிறார். இந்தத் தனிப்படை டூவிபுரம் பகுதியில் ரோந்து பணியில் இருந்திருக்கின்றனர். அது சமயம் சந்தேகப்படும்படியான வகையில் நின்றிருந்த அண்ணா நகரின் அன்சார்அலி, மாரிமுத்து, இம்ரான்கான் ஆகிய மூவரையும் பிடித்து விசாரித்தவர்கள், அவர்களின் பையைச் சோதனையிட்டதில் உயரிய வெளிநாட்டுப் போதைப் பொருளான ஹெராயின் இருப்பது தெரியவந்திருக்கிறது.

 

தொடர்ந்து அவர்கள் இம்ரான்கான் வீட்டைச் சோதனை போட்டதில் 3 பாக்கெட்களில் இருந்த 162 கிராம் ஹெராயினைக் கைப்பற்றியிருக்கிறார்கள். இதையடுத்து அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், தருவைக்குளம் பகுதியைச் சேர்ந்த அந்தோணி முத்து (42) என்பவரது வீட்டில் தீவிர சோதனை நடத்தியிருக்கிறார்கள். அங்கு 19 பாக்கெட்களில் பேக் செய்யப்பட்ட 21 கிலோ ஹெராயின் எனப்படும் வெளிநாட்டின் ஹைகுவாலிட்டி ஹெராயின் சிக்கியிருக்கிறது. அவரிடம் தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டதில், தன்னுடைய தங்கு படகில் மீன் பிடிக்கப்போவது வழக்கம். கடந்த ஓராண்டிற்கு முன்பு லட்சத்தீவு கடல் பகுதிக்குள் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது கடலில் பெரிய பார்சல் ஒன்று மிதந்துவந்தது.

 

High quality drug floating in the sea ... Six teenagers caught by the police

 

அதில் சுமார் 27 பாக்கெட்களில் 32 கிலோ வரையிலான இந்த ஹெராயின் இருந்தது. அதனைக் கைப்பற்றி தன்னுடைய நெருக்கமான உறவினரின் வீட்டில் பதுக்கி வைத்திருந்து சில்லறையாக விற்பனை செய்துவந்ததாகத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, மார்க்கெட் நிலவரப்படி 25 கோடி மதிப்பிலான ஹெராயினைக் கைப்பற்றிய தனிப்படையினர், அந்தோணிமுத்து மற்றும் அவருக்கு உதவிய பிரேம்சிங், கசாலி, விற்பனை செய்த அன்சார்அலி, மாரிமுத்து இம்ரான்கான் உள்ளிட்ட ஆறு பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து தனிப்படை மற்றும் மத்திய பாகம் போலீசார் மேற்கொண்டு விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

 

தூத்துக்குடி வரலாற்றில் 25 கோடி வரையிலான ஹெராயின் போதைக் கேட்ச் அப் மிகப்பெரியது என்கிறார்கள் காவல் வட்டாரத்தினர். இந்த ஆப்பரேஷனை நடத்திய தனிப்படையினரைப் பாராட்டிய மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார், “இது பெரிய அளவிலான மதிப்பு கொண்ட போதைச் சரக்கு. மாவட்டத்தில் போதை வழக்கில் சம்பந்தப்பட்ட 25 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. போதை விற்பனை, கடத்தலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்படுவார்கள். தவிர, இந்த வழக்கில் தொடர்புடைய புரோக்கர் முருகன் என்பவரை தேடிவருகிறோம்” என்றார் எஸ்.பி. 25 கோடி மதிப்பிலான மிகப்பெரிய போதை பறிமுதல் மாவட்டத்தில் பரபரப்பு பேச்சாகியிருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.