Skip to main content

மாணவர்களிடமே பணம் வசூலித்த தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்!

Published on 23/03/2022 | Edited on 23/03/2022

 

Head teacher fired for not appointing a teacher to collect money from students!

 

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றியம், மழையூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கணிணி தணிக்கையியல் என்ற புதிய பாடப்பிரிவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் அரங்கசாமி, கல்வித்துறை அனுமதி கேட்டுள்ளார். ஆனால் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளதால், புதிய பாடப்பிரிவிற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில், தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்து கொள்வதாக அனுமதி பெற்று சுமார் 40 மாணவ, மாணவிகளைச் சேர்த்துள்ளார். 

 

ஆனால் பள்ளி தொடங்கி, ஐந்து மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், இதுவரை கணக்குப் பதிவியல், தணிக்கையியல், வணிகவியல் பாடங்களுக்கு ஆசிரியர் நியமனம் செய்யாததால், பள்ளி மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவரகம் வந்து ஆசிரியர் இல்லாததால் பாடம் நடத்தவில்லை. அதனால் எங்களால் பொதுத் தேர்வு எழுதுவதில் சிரமம் உள்ளதாக மனுக் கொடுத்தனர்.

 

மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து, மாணவர்களை அனுப்பி வைத்தார். தொடர்ந்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி. சத்தியமூர்த்தியிடம், இது குறித்து தகவல் கொடுத்து உடனடியாக மாற்றுப் பணியில் ஆசிரியர் நியமனம் செய்ய உத்தரவிட்டனர். இந்த உத்தரவையடுத்து இரண்டு ஆசிரியர்கள் மாற்றுப் பணியில் மழையூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு செல்கின்றனர்.

 

மனுக் கொடுத்த மாணவர்களும், பெற்றோர்களும் கூறும் போது, "அரசு ஆசிரியர் நியமனம் தாமதமாகும் என்பதால் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும். அவர்களுக்கு மாத சம்பளம் கொடுக்க வேண்டும் என்றும் கூறி ஒவ்வொரு மாணவரிடமும் தலா ரூபாய் 250 வீதம் சுமார் 40 மாணவ, மாணவிகளிடம் வசூல் செய்தார். ஆனால் இதுவரை ஆசிரியர் நியமனம் செய்யவில்லை என்று கேட்ட போது, வணிகவியல் படித்தவர்கள் யாரும் இல்லை. உங்களுக்கு தெரிந்தவர்கள் இருந்தால் அழைத்து வாருங்கள் என்று மாணவர்களிடமே கூறினார் தலைமை ஆசிரியர் அரங்கசாமி. அதனால் தான் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்தோம்.

 

மேலும் முனனாள் மாணவர்கள் ஏதேனும் சான்றிதழில் கையெழுத்துப் பெற வந்தாலும், அதற்கென தனி வசூல் செய்கிறார். மாணவிகளுக்கான கழிவறையை திறந்துவிடாமல் மூடியே கிடப்பதால் மாணவிகள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள் என்றனர்.

 

புகார் கொடுத்த மாணவர்களிடம் விசாரித்த கல்வித்துறை அதிகாரிகள் கூறும் போது, "பள்ளித் தொடங்கி 5 மாதமாக ஆசிரியர் இல்லை என்பதைத் துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் மாணவர்கள் நலனில் அக்கரையின்றி செயல்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர் அரங்கசாமி (வயது 58) என்பவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளோம். மேலும் மாணவர்களைத் தேர்வுக்கு தயார்படுத்த மாற்றுப் பணியில் இரண்டு ஆசிரியர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் உள்ள முறைகேடுகள் குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

மாணவர்களுக்கு கோடைக்கால இலவச விளையாட்டுப் பயிற்சி துவக்கம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Summer free sports training for students begins in Chidambaram

கோடைக்காலத்தில் மாணவர்களை நல்வழிப்படுத்தும் விதமாக இலவச விளையாட்டு பயிற்சிகள் துவக்கப்பட்டது.

சிதம்பரம் அரசு உதவி பெறும் ஆறுமுக நாவலர் மேல்நிலைப்பள்ளி சார்பாக சின்ன மார்க்கெட் பகுதியில் உள்ள பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவர்களை கோடைக்காலத்தில்  நல்வழிப்படுத்தும் விதமாக  இலவசமாக காலை மற்றும் மாலை வேலைகளில் யோகா, சிலம்பம், இறகு பந்து, கூடைப்பந்து, கபடி ஆகிய விளையாட்டுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 

இதன் துவக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை பள்ளி மைதானத்தில்  நடைபெற்றது.  இந்நிகழ்சிக்கு ஆறுமுக அரசு உதவி பெறும் பள்ளி குழு செயலாளர் அருள் மொழி செல்வன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பள்ளி குழு தலைவர் சேது சுப்பிரமணியன் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டு பயிற்சிகள் குறித்தும், அதனால் ஏற்படும் உடல் ரீதியான நன்மைகள் குறித்தும் பேசினார்கள்.

Summer free sports training for students begins in Chidambaram

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராம்குமார், உடற்கல்வி ஆசிரியர் எத்திராஜன், சிலம்பகளை ஆசிரியர் ராஜா ராம் யோகக்கலை ஆசிரியர் முத்துக்குமாரசாமி, கூடைப்பந்து நடராஜன், அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வி பயிற்றுநர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பயிற்சிகளை அளித்தனர். இதில் சிதம்பரம் நகரத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, பள்ளியின் தமிழாசிரியர் செல்வம் நன்றி கூறினார் இதில் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Next Story

சிதம்பரத்தில் மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Higher education guidance program for students in Chidambaram

சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய  மாணவ மாணவிகளுக்கு  உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்சிக்கு  சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி தலைமை தாங்கி மாணவர்கள் மத்தியில் பேசுகையில்  பன்னிரெண்டாம் வகுப்பு  முடித்து  அடுத்து என்ன படிக்கலாம்.  மாணவர்களின் கனவுகளை நினைவாக்கும்  படிப்புகள்  எவை,   உயர்கல்விக்கு செல்ல ஏராளமான உதவித் தொகை வாய்ப்புகள் உள்ளது என்றும்,   தேர்ச்சி பெற்ற அனைத்து  மாணவர்களுக்கும்  உயர் கல்விக்கான  வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு சிறப்பாகச் செய்து வருகிறது.  சிறந்த வாய்ப்புகளுக்கு எந்தக் கல்லூரியிலும்  சேர்ந்து படிக்கலாம்,  வருங்காலத்தைப் பலப்படுத்த எந்தப் பாடப்பிரிவைத்  தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து  மாணவர்களிடம் விளக்கி பேசினார்.

Higher education guidance program for students in Chidambaram

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆதிதிராவிட  மற்றும் பழங்குடியின நல அலுவலர்  லதா அனைவரையும் வரவேற்றார். மண்டல உதவி இயக்குநர் சுப்பிரமணியன்,  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் சரவணகுமார்,  நந்தனார் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குகநாதன், குமராட்சி வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளவரசன்,  ஒருங்கிணைப்பாளர் பூங்குழலி,  பள்ளித்துணை ஆய்வாளர்  வாழ்முனி,  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இதில் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ரவி, அருள்சங்கு, நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராதாகிருஷ்ணன்,  சுவாமி சகஜானந்தா மணி மண்டப ஒருங்கிணைப்பாளர் பாலையா, குமராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பாலமுருகன், உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தில் உள்ள  ஆதி திராவிட நலத்துறை   பள்ளிகளின் மாணவ மாணவிகள்  300-க்கும் மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டு  உயர்கல்வி குறித்து ஆலோசனைகளைப் பெற்றனர்.   இவர்களுக்கு உயர் கல்வி குறித்த விவரங்களை கருத்தாளர் கோபி வழங்கினார். சிதம்பரம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் சுதா அனைவருக்கும் நன்றி கூறினார்.