Published on 14/12/2018 | Edited on 14/12/2018
![Gudka Case- summon to Minister Vijayapaskar to appear tomorrow](http://image.nakkheeran.in/cdn/farfuture/L2474snus7n0TEPALzlQyT5JTZPfzvpsAyb6XC4Jqmw/1544818574/sites/default/files/inline-images/Untitled-1_0.png)
குட்கா முறைகேடு வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் அமைச்சர் ரமணா ஆஜராகும்படி சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நாளை ஆஜராக வேண்டுமென சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நாளை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ஆஜராக வேண்டுமென சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
ஏற்கனவே குட்கா விவகாரம் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனிடம் சிபிஐ விசாரணை நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.