Skip to main content

"கோவில் ஜீயரை தேர்ந்தெடுப்பதில் அரசு தலையிடக் கூடாது" - வைணவர்கள் கண்டனம்! 

Published on 12/05/2021 | Edited on 12/05/2021

 

Government should not interfere in the selection of temple zealots

 

கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலின் 51வது ஜீயர் பதவிக்கு தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. இந்த அறிக்கையை அனுப்பிய உடன் ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள தீர்த்தகாரர்கள், ஸ்தலதாரர்கள் இணைந்து இந்த ஜீயர் பதவிக்கான தேர்ந்தெடுக்கப்படும் சுற்றறிக்கையைக் கண்டித்து தங்களுடைய கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர்.

 

அதில், “ஜீயர் என்ற முழுமையான சன்னியாசம் அடைந்து தீட்சைபெற்று மோட்சத்திற்கு அழைத்துச் செல்லக்கூடிய மிக உன்னதமான பதவியை, ஏதோ அலுவலகத்தில் பணியாற்றக்கூடிய தட்டச்சர்களும், அலுவலக உதவியாளர்களும் போல ஜீயரைத் தேர்ந்தெடுக்க விண்ணப்பிக்கலாம் என்று கூறியிருப்பது கண்டனத்துக்குரியது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் சரத்து 26இன் படி, அரசு எந்த சமய உள்ளீடுகளிலும் தலையிடக் கூடாது என்ற சட்டம் இருக்கிறது. ராமானுஜருக்கு பிறகு இதுவரை சுமார் 50 ஜீயர்களையும் ஸ்தலதாரர்கள் தீர்த்தகாரர்கள் இணைந்து தேர்ந்தெடுத்து வந்த நிலையில், 51வது ஜீயரை மட்டும் அரசு தேர்ந்தெடுப்பதற்கான காரணம் என்ன?

 

அறநிலையத்துறையினுடைய பணி என்பது கோவில் சொத்துக்களை நிர்வகிப்பது, பராமரிப்பது என்பதோடு மட்டுமே என்பதை அவர்கள் அறிந்திருந்தும், சமய நம்பிக்கைக்குள் நுழைவது என்பது அத்துமீறல் என்றும், இது வைணவர்களை மொத்தமாக ஆக்கிரமிக்கும் செயல் என்பதும் இந்த அரசு உணர வேண்டும். தேவஸ்தானம் அறங்காவலர்கள் குழு ஜீயரை தேர்ந்தெடுக்கும் அளவிற்கு அவர் சாதாரணமானவர் அல்ல. அவர்தான் ஸ்ரீரங்கம் கோவிலின் தலைமை குரு. அவருக்கென்று பல பூஜை புனஸ்காரங்களும் பல்வேறு சடங்குகளும் நடத்துவதற்கான அதிகாரம் உடையவர். எனவே எங்களுடைய நம்பிக்கைக்குள் அரசு ஒருபோதும் தலையிடக்கூடாது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது” என்று தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.