Skip to main content

கஞ்சா பொட்டலம் விற்கும் நிலைக்கு சிறுவர்களைத் தள்ளிய கஞ்சா பழக்கம்-இருவர் மீது வழக்கு!

Published on 14/04/2023 | Edited on 14/04/2023

 

 Ganja habit that forced children to sell ganja packets - case against two in Sivakasi police station!

 

போதைப் பொருளான கஞ்சா விற்பனையைத் தடுப்பதில் தீவிரம் காட்டி வருகிறது தமிழ்நாடு காவல்துறை. ஆனாலும், தவறான வழியில் பணம் சம்பாதிப்பதையே  குறிக்கோளாகக் கொண்டு கஞ்சாவைப் புழக்கத்தில்விடும் பேர்வழிகள், இளைய சமுதாயத்தை கஞ்சா போதைக்கு அடிமையாக்குவதில் காவல்துறையினருக்கு பெரும் சவாலாக உள்ளனர்.

 

சிவகாசியைச் சேர்ந்த சங்கிலியின் மகன் (பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது) ஸ்ரீவில்லிபுத்தூர் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் 12ஆம் படித்து முடித்திருக்கிறான். கடந்த 10-ஆம் தேதி இரவு முழுவதும் அவன் வீட்டுக்கு வரவில்லை. 11ஆம் தேதி காலை ஒரு மாதிரியான நிலையில் அவன் வீட்டுக்கு வந்தபோது,   “ராத்திரி முழுக்க எங்கே போயிருந்த?” என்று விசாரித்த சங்கிலி, மகனுடைய பேன்ட் பாக்கெட்டை சோதனை செய்த்தபோது , சின்னதாக ஒரு கஞ்சா பொட்டலம் இருந்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து அவன் “நண்பர்கள் ராஜரத்தினம், ராஜபாண்டியோடு நானும் சேர்ந்து சிவகாசி நாரணாபுரம் ரோடு போஸ் காலனி, முனீஸ்வரன் காலனியைச் சேர்ந்த கார்த்தீஸ்வரனிடமும் மதனிடமும் அடிக்கடி கஞ்சா வாங்கி புகைப்போம். அந்தப் பழக்கத்தில் கஞ்சா வாங்கி விற்று ராஜபாண்டி மூலம் அவர்களுக்கு பணம் கொடுப்போம். இந்த வேலையைச் செய்ததற்கு எனக்கு பணமும் கொஞ்சம் கஞ்சாவும் கொடுத்தார்கள். அந்த கஞ்சாவை குடித்துவிட்டு, ராத்திரி முழுவதும் சிவகாசி ரயில்வே ஸ்டேஷன் பக்கம் இருந்தேன்.” என்று தந்தை சங்கிலியிடம் நடந்ததைச் சொல்லியிருக்கிறான்.

 

மறுநாள் 12 ஆம் தேதியும் இரவு வீட்டுக்கு வராமல் அதிகாலை 3 மணிக்கு அதே நிலையில் மகன் வர, சங்கிலி சோதனை செய்தபொழுது 15 சின்ன கஞ்சா பொட்டலங்கள் இருந்திருக்கின்றன.  அதன்பிறகு 13-ஆம் தேதி சிவகாசி டவுண் காவல் நிலையத்தில் சங்கிலி புகார் கொடுத்திருக்கிறார். சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்ட பிரிவு மற்றும்  போதை மருந்துகள் மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டப் பிரிவுகளின் கீழ் மதன் மற்றும் கார்த்தீஸ்வரன் மீது வழக்கு பதிவாகியுள்ளது.  

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.