Skip to main content

தமிழகம் நோக்கி பயணிக்கும் கஜா ; பேரிடர் மீட்பு குழுவினர் விரைவு!!

Published on 12/11/2018 | Edited on 12/11/2018

 

Gajah travels towards Tamilnadu; Hurry rescue crew quick !!

 

வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. மதியம் 12 மணியளவில் தமிழகத்திற்கு 820 கிலோமீட்டர் தொலைவில் இருந்த புயல் 8 மணியளவில் 720 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது. 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் இந்த புயல் வரும் 15ம் தேதி பாம்பனுக்கும் நாகைக்கும்  இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற 14-ஆம் தேதி இரவு முதல் 15ஆம் தேதி வரை ஏழு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

 

இந்நிலையில் கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோர மாவட்டங்களுக்கு எட்டு தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்துள்ளது. நாகை மாவட்டத்திற்கு மூன்று குழுக்களும், கடலூர் மாவட்டம் சிதம்பரத்திற்கு  இரண்டு குழுக்களும் விரைந்துள்ளன. அதேபோல் சென்னை, கடலூர், ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு தலா ஒரு குழு விரைந்துள்ளது, காஜா புயல் குறித்து கட்டுப்பாட்டு அறை மூலம் 24 மணி நேரம் தொடர்ந்து கண்காணிக்கவும் தீவிரம் கட்டப்பட்டுள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கிய வெயிலின் தாக்கம்; அறநிலையத்துறை வெளியிட்ட குளுகுளு அறிவிப்பு

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Free Water Butter in 48 Temples

வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள 48 கோயில்களில் இலவச நீர் மோர் வழங்கும் திட்டம் நாளை முதல் அமலுக்கு வரும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தற்போதே கோடை காலத்திற்கான வெயிலின் தாக்கம் தொடங்கியுள்ளதால், பல இடங்களில் தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் சார்பாக தண்ணீர் பந்தல், நீர் மோர் பந்தல் ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெயிலின் தாக்கத்தைத் தணிக்க தமிழக அறநிலையத்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள 48 முதல்நிலை கோவில்களில் நாளை முதல் நீர்மோர் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதனையொட்டி நாளை சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இலவச நீர்மோர் வழங்கும் திட்டத்தை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைக்க இருக்கிறார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Next Story

17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
Chance of rain in 17 districts

நேற்று முன்தினம் புதுக்கோட்டை, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் சாரல் மழை பொழிந்த நிலையில் இன்று தமிழகத்தில் 17 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அந்த அறிவிப்பின்படி விழுப்புரம், அரியலூர், கடலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி ஆகிய 17 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.