தனியார் பால் நிறுவனங்கள் குறித்து பேச தடை: ராஜேந்திர பாலாஜி மேல்முறையீடு
தனியார் பால் நிறுவன கலப்பட புகார் விவகாரத்தில், பால் மாதிரிகளை அந்தந்த நிறுவனங்களே சோதனை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பதை எதிர்த்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
மேலும் தான் எந்த ஒரு பால் நிறுவனத்திற்கு எதிராகவும் கருத்து கூறவில்லை. அதனால் தனியார் பால் நிறுவனங்கள் பற்றி பேச நீடிக்கப்பட்டுள்ள தடையை விலக்க வேண்டும் எனவும் ராஜேந்திர பாலாஜி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.