Skip to main content

லஞ்சம் வாங்கி போலீஸிடம் சிக்கிய உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்!!

Published on 07/01/2022 | Edited on 07/01/2022

 

Food security officer arrested for bribery

 

தேனியில் மீன் கடை உரிமையாளரிடம் 10,000 லஞ்சம் வாங்கிய உணவு பாதுகாப்பு அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார். தேனி நகராட்சி அலுவலகம் அருகில் திருமலை பால்பாண்டி என்பவர் கடல் மீன்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் கடந்த மாதம் 30ஆம் தேதி தேனி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சண்முகம் சோதனை நடத்தினார். அப்போது அங்கு மீன்களில் ரசாயனம் கலந்து உள்ளதாகவும் அது குறித்து அபராதம் விதிக்க போவதாகவும் அவர் கூறினார். பின்னர் அவர் திருமலை பால்பாண்டியை தொடர்புகொண்டு அபராதம் விதிக்காமல் இருக்க வேண்டும் என்றால் 15 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கேட்டார்.

 

அதற்கு திருமலை பால்பாண்டி தனது கடையில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்றும் அவ்வளவு தொகையை லஞ்சமாக கொடுக்க முடியாது என்றும் கூறினார். அப்போது பேரம் பேசிய சண்முகம் 10,000 லஞ்சம் கொடுக்குமாறு கூறினார். அதைத் தொடர்ந்து திருமலை பால்பாண்டி பணம் கொடுப்பதாக தெரிவித்துவிட்டு தேனி லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் இதுதொடர்பாக புகார் கொடுத்தார். அப்போது அவரிடம் ரசாயன பவுடர் தடவப்பட்ட 10 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்து அனுப்பினர். இந்நிலையில் பழைய பஸ் நிலையத்திலுள்ள தேனி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலகத்திற்கு பால்பாண்டி சென்றார். அங்கு அவர் பத்தாயிரத்தை உணவு பாதுகாப்பு அலுவலர் சண்முகத்திடம் கொடுத்தார்.

 

Food security officer arrested for bribery

 

அப்போது அங்கு பதுங்கியிருந்த தேனி லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு கருப்பையா, இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரியா உள்பட 8 பேர் கொண்ட குழுவினர் திடீரென அங்கு நுழைந்தனர். பின்னர் போலீசார் லஞ்சம் வாங்கிய சண்முகத்தைகையும் கைகளவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அதில் இருந்த ஆவணங்கள் குறித்து போலீசார் சோதனை நடத்தினர். இதற்கிடையே மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலரான ராகவனை லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கு வரவழைத்து அவரிடமும் விசாரணை நடத்தினர். பின்னர் கைது செய்யப்பட்ட சண்முகத்தை போலீசார் ஜீப்பில் ஏற்றி தேனி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். லஞ்சம் வாங்கிய உணவு பாதுகாப்பு அலுவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தேனி மக்களவை வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைத்து சீல்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இந்திய மக்களவைத் தேர்தல் முதல் கட்ட தேர்தலாக தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணியில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்த நிலையில் வாக்கு பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தேனி மக்களவையில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1788 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் சேகரிக்கப்பட்டு தேனி கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த (ஸ்டாங் ரூம்) பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கும் பணி நடைபெற்றது.

தேனி மக்களவையில் உள்ள சோழவந்தான், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், கம்பம், போடிநாயக்கனூர் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 69.87% வாக்குகள் பதிவாகியுள்ளது. நேற்று மாலை தேர்தல் முடிவ டைந்த நிலையில் வாக்குப்பதிவு மையங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேகரிக்கும் பணி இரவு முழுவதும் நடைபெ ற்றது.

Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இதனைத் தொடர்ந்து கொடுவார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்டாங் ரூமில் அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் சீல் வைக்கும் பணி நடைபெற்றது. ஸ்ட்ராங் ரூமில் அனைத்து பகுதிகளும் முழுமையாக மூடப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையின் நான்கு அடுக்கு பாதுகாப்பில்  பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.  வாக்கு எண்ணிக்கை ஜூன் 04  நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெற இன்னும் 45 நாட்கள் உள்ள நிலையில், பலத்த பாதுகாப்பில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.