Skip to main content

6 வருடக் காதல்.... இளம்பெண்ணை ஏமாற்றிய காதலனின் குடும்பம்!

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
family of the boyfriend who cheated on the young girl in Coimbatore!

கோவை செல்வப்புரத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், கோவையைச் சேர்ந்த இளைஞரைக் கடந்த ஆறு வருடங்களாகக் காதலித்து வந்துள்ளார். இருவருக்கும் இடையே நெருக்க அதிகமானதால் அடிக்கடி சந்தித்து தனிமையில் இருந்துள்ளனர். அதன் காரணமாக இளம்பெண் 3 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இதனைத் தொட்ர்ந்து திருமணம் செய்து கொள்ளுமாறு காதலனை அந்த பெண் வற்புறுத்தி வந்துள்ளார். இது காதலனின் வீட்டிற்கு தெரியவர, அவரது பெற்றோர் கருவைக் கலைத்தால் தனது மகனுடன் திருமணம் செய்து வைப்பதாக உறுதியளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இளைஞரின் பெற்றோர் சொன்னதை நம்பி தனது வயிற்றில் வளர்ந்த கருவை அந்த பெண் கலைத்துள்ளார். ஆனால் அந்த இளைஞருக்கு வேறு ஒரு பெண்ணுடன் அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதானல் மனவேதனை அடைந்த அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும், ஆனால் புகார் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் கண்ணீர் மல்க கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த இளம்பெண், “காதலித்து திருமணம் செய்து கொள்வதாக இளைஞர் என்னை ஏமாற்றி விட்டார். எனது நிலை குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நான் காதலித்த இளைஞர் என்னையும், எனது குடும்பத்தையும் ஆபாச வார்த்தைகளால் திட்டி, கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் இது குறித்து புகார் அளித்தாள் இருவரும் காதலித்த காலங்களில் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டுகிறார். இளைஞர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மனுக் கொடுத்துள்ளார். 

சார்ந்த செய்திகள்