Skip to main content

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு; புதிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்

Published on 31/12/2022 | Edited on 31/12/2022

 

Extension more month link Aadhaar number with electricity connection number

 

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

 

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழக அரசின் மின்சாரத் துறை தெரிவித்திருந்த நிலையில், இதற்கான சிறப்பு முகாம் கடந்த நவம்பர் மாதம் 28 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 31 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

 

இந்நிலையில், கடைசி நாளான இன்று மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, "மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலநீட்டிப்பு வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேலும் ஒரு மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜனவரி 31 வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்காக கூடுதல் முகாம்கள் நடத்தப்படவுள்ளன." எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்