Skip to main content

வேறு எந்தக்கட்சியிலும் சேரவில்லை - தவறான நடவடிக்கை: ஆவுடையப்பன் பேட்டி..!

Published on 18/09/2017 | Edited on 18/09/2017
வேறு எந்தக்கட்சியிலும் சேரவில்லை - தவறான நடவடிக்கை: ஆவுடையப்பன் பேட்டி..!

கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் இந்த 18 பேரையும் நீக்க முடியாது அவர்கள் வேறு எந்தக்கட்சியிலும் சேரவில்லை. இது தவறான நடவடிக்கை என முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,

தமிழக சட்டமன்ற வரலாற்றிலேயே இல்லாத அதிரடியான நடவடிக்கையாக 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சபாநாயகர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கட்சித்தாவல் தடை சட்டத்தின் அடிப்படையில் இந்த18 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

“கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் இந்த 18 பேரையும் நீக்க முடியாது. ஏனென்றால், அவர்கள் வேறு எந்தக்கட்சியிலும் சேரவில்லை. மேலும், சட்டமன்றத்திற்குள் மட்டுமே கொறாடாவிற்கு உத்திரவிட அதிகாரம். இது தவறான நடவடிக்கை” என்று குறிப்பிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்