Skip to main content

தீபாவளிக்கு மறுநாள் பள்ளிகளுக்கு விடுமுறையா? அமைச்சர் பதில்

Published on 22/10/2022 | Edited on 22/10/2022

 

education minister answer diwali holiday question

 

மாவட்ட மக்களுக்கான அடுத்த 10 ஆண்டுகளில் செயல்படுத்த வேண்டிய தொலைநோக்கு திட்டங்கள் குறித்தான ஆலோசனை கூட்டம் இன்று (22/10/2022) திருச்சி கலையரங்கம் வணிக வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என். நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். அதன் பிறகு பத்திரிகையாளர்கள் கேள்விக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர். 

 

அப்போது அமைச்சர் கே.என் நேருவிடம், ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட நிலையில்,  “இந்த வழக்கு போலீஸ் விசாரணையில் உள்ளது. அதனால் எந்தவித கருத்தும் கூற முடியாது" என பதிலளித்தார். 

 

இதனைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம், தீபாவளிக்கு மறுநாள் 25 ஆம் தேதி புதுச்சேரி அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது. அதேபோல் தமிழகத்திலும் விடுமுறை அளிக்கப்படுமா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர், "வரும் 25ம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதே கோரிக்கையை அரசு ஊழியர்களும் வைத்துள்ளனர். எனவே இந்த கோரிக்கை தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. முதல்வர் விரைவில் அறிவிப்பார்" என்றார்.  

 

 

சார்ந்த செய்திகள்