Skip to main content

நெல்லுக்குப் பாயும் நீர் புல்லுக்கும் பாய்கிறது! -ஔவையார் பாடலும் எடப்பாடியின் ஓட்டரசியலும்..

Published on 04/03/2019 | Edited on 04/03/2019

 


தமிழகத்தில் வறுமைக்கோட்டுக்குக் கீழ்  உள்ள  60 லட்சம் ஏழைத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.2000 சிறப்பு நிதி உதவி வழங்கப்படும் என்று சட்டசபையில் கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.  இதற்காக ரூ.1200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

e

 

தேர்தலில் வாக்களிப்பதற்கு லஞ்சமாக, அதையும்  சட்டப்பூர்வமாக மக்களுக்குக் கொடுப்பதாக,  எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. சட்டப்பஞ்சாயத்து இயக்கமோ,  இந்தத் திட்டத்திற்கு தடை கோரி, உயர்நீதிமன்றத்தில் முறையிட்டது.  அதற்கு,  'அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது' என நீதிமன்றம் கருத்து வெளியிட்டது. 

 

இந்நிலையில், இந்தத் திட்டத்தை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்துள்ளார். திட்டம் தொடங்கி வைக்கப்பட்டாலும், இதற்கான கணக்கெடுக்கும் பணிகளும், தொழிலாளர்களின் விபரங்களும் தீவிரமாக சேகரிக்கப்பட்டு வருகின்றன.

 

‘இந்தத் திட்டம் உண்மையிலேயே ஏழை மக்களுக்குப் பயனளிக்கும்’ என ஒரு வாதத்துக்காக வைத்துக் கொண்டாலும், ஏழை மக்களுக்குக் கொடுப்பதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால், அரசாங்க சம்பளம் வாங்குபவர்களுக்கும், அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களுக்கும் பணம் கொடுப்பதற்காக கணக்கெடுத்துச் சென்றுள்ளதை எப்படி ஏற்க முடியும்?" என்றார் சென்னைவாசியான நம் நண்பர். 

 

c

 

அவரே தொடர்ந்து, "போலீஸ்காரங்களுக்கு என்ன குறைச்சல்? சம்பளத்திற்கு மேல கிம்பளம்னு நிறைய வாங்குறாங்க. அவங்க வசிக்கிற குடியிருப்பிலும் மாநகராட்சி சார்பில் வந்து கணக்கெடுத்து, அப்ளிகேசன் வாங்கிட்டு போயிருக்காங்க." என்றார் ஆற்றாமையுடன்.

 

இதுதொடர்பாக கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்ட அரசாங்க ஊழியரோ  “என்னை அப்ளிகேசன் கொடுத்து நிரப்பி வாங்கிட்டு வரச்சொன்னாங்க. அதை நான் பண்ணுறேன். நெல்லுக்குப் பாயும் நீர் புல்லுக்கும்  பாயும்ல.  அதுபோலத்தான் இந்தத் திட்டம்.” என்று விளக்கம் தந்தார். 

 

ஔவையார் இயற்றிய மூதுரை வெண்பா இது -

நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம், தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரே அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை!

இன்றைய ஓட்டரசியலுக்கு, சங்ககாலப் புலவர் ஔவையார் பாடலைத் துணைக்கழைப்பது கொடுமைதான்!

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.