Skip to main content

வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம்! குறுஞ்செய்தியை நம்பி லட்சத்தை இழந்த இளைஞர்! 

Published on 14/07/2022 | Edited on 14/07/2022

 

Earn from home! Youth who lost lakhs relying on SMS!

 

விழுப்புரம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கடந்த 30.06.2022 அன்று விழுப்புரம் சாலமேடு பகுதியைச் சேர்ந்த பிரபா அரவிந்தன்(20) என்பவர், புகார் ஒன்று கொடுத்தார். 

 

அந்தப் புகாரில், 28.06.2022 அன்று அவரது கைபேசிக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இந்த செய்தியை வீட்டில் இருந்தபடியே வேலை செய்து ஒரு நாளைக்கு 7000 வீதம் பணம் சம்பாதிக்கலாம் அதற்கான ஆலோசனை வழங்குவதாக இருந்துள்ளது. இதை பயன்படுத்தி பணம் சம்பாதிப்பதற்காக முன் பணமாக ஒரு குறிப்பிட்ட தொகையை அவர்கள் கூறும் வங்கி கணக்கில் அனுப்புமாறு அரவிந்தனிடம் கூறியுள்ளனர். 

 

அதன்படி அந்த மர்ம மனிதர்கள் கொடுத்த வங்கி கணக்கிற்கு சிறிது சிறிதாக அரவிந்தன் தனது வங்கிக் கணக்கில் இருந்தும், ஜி-பே மூலமாக மொத்தம் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் அனுப்பி உள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் எந்த விவரமும் தெரியாததால், குறுஞ்செய்தி அனுப்பிய நபரை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், அந்த நபர் பதில் அளிக்காமல் இருந்துள்ளார். அப்போதுதான் அரவிந்தன் தான் ஏமாறியது தெரியவந்தது. 

 

அதனைத் தொடர்ந்து அவர், உடனடியாக சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரை பெற்ற சைபர் கிரைம் காவல்துறையினர் அந்த மர்ம நபரின் வங்கிக் கணக்கை முடக்கியுள்ளனர். அதன்பிறகு அந்த வங்கி கணக்கில் இருந்து ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட அந்தப் பணத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா மற்றும் சைபர் கிரைம் குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோவிந்தராஜ் ஆகியோர் பிரபா அரவிந்தனிடம் இன்று ஒப்படைத்துள்ளனர். 


இப்புகாரின் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொண்ட உதவி ஆய்வாளர் ரவிசங்கர், முகமது அசாருதீன் மற்றும் ராஜசேகர் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா பாராட்டுகளை தெரிவித்தார். அதேபோல், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளருக்கும் தனது பாராட்டைத் தெரிவித்தார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமன்னாவிற்கு சைபர் கிரைம் சம்மன்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
tamanna summoned by maharashtra cyber crime for ipl telecast issue

கடந்த 2023ஆம் ஆண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை வியாகாம் நிறுவனம் வாங்கியது. அதன்படி அந்நிறுவனத்தின் செயலியான ஜியோ சினிமா செயலியில் இலவசமாக ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பி வந்தது. 2023 முதல் அடுத்த ஐந்தாண்டிற்கு ஐபில் தொடரின் டிஜிட்டல் உரிமையை வியாகாம் நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஃபேர்பிளே என்கிற சூதாட்ட செயலியில் சட்டவிரோதமாக ஐபிஎல் போட்டிகள் நேரலையில் ஒளிபரப்பப்பட்டதாக கூறி வியாகாம் நிறுவனம் மகாராஷ்ட்ரா சைபர் கிரைமில் புகார் அளித்தது. அந்த புகாரில், ஃபேர்பிளே செயலில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பப்பட்டதால் தங்கள் நிறுவனத்துக்கு ரூ.100 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாக குறிப்பிட்டிருந்தது. இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், ஃபேர்பிளே செயலியின் ஊழியர் ஒருவரை கைது செய்தனர். மேலும் அச்செயலியை விளம்பரப்படுத்திய பிரபலங்களை விசாரணை செய்ய முடிவெடுத்தனர். அந்த வகையில் பாலிவுட் நட்சத்திரங்கள் பாட்ஷா, சஞ்சய் தத், ஜாக்குலின் பெர்னாண்டஸ், தமன்னா உள்ளிட்ட பலர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.  

கடந்த 23 ஆம் தேதி சஞ்சய் தத்துக்கு சைபர் கிரைம் போலீசார் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர். ஆனால், தான் இந்தியாவில் இல்லாத காரணத்தால் தன்னால் ஆஜராக முடியவில்லை என சஞ்சய் தத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது தமன்னாவிற்கு வருகிற 29ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். 

Next Story

மறைந்த எம்.எல்.ஏ. புகழேந்தி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Late MLA pugazhendhi Tribute to CM MK Stalin

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (05.04.2024) இரவு விழுப்புரம் வந்திருந்தார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார்.

அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து நேற்று (06.04.2024) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (06.04.2024) இரவு விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா. புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர்.