Skip to main content

மருத்துவக் குழுவினருடன் முதல்வர் ஆலோசனை... மீண்டும் தமிழகம் முழுவதும் முடக்கப்படுமா..?

Published on 29/06/2020 | Edited on 29/06/2020

 

உHஇ

 

இன்று காலை மருத்துவக் குழுவினருடன் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். கரோனா பரவலைத் தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் ஆலோசிக்கிறார். 

 

இந்த ஆலோசனையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். ஜூன் 30- ஆம் தேதியுடன் பொதுமுடக்கம் முடியும் நிலையில் மருத்துவக் குழுவுடன் முதல்வர் ஆலோசிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவக் குழுவினருடன் முதல்வர் ஒன்பதாவது முறையாக இன்று ஆலோசனை நடத்துகிறார்.

 

 

சார்ந்த செய்திகள்