Published on 24/01/2020 | Edited on 24/01/2020
குடியுரிமைத் திருத்தச் சட்டம் மத அடிப்படையில் நாட்டை பிளவு படுத்துகிறது என கூறி, அந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பொதுமக்கள், மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
![DMK signature campaign against Citizenship Amendment Act](http://image.nakkheeran.in/cdn/farfuture/wA3GMXI-QeoUUY9sz579dtezxTLFet2PswpLuYLurjw/1579848937/sites/default/files/inline-images/111111_38.jpg)
இந்நிலையில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து ஆலோசிப்பதற்காக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் பிப்ரவரி 8 ஆம் தேதி வரை கையெழுத்து இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.