Skip to main content

கோட்டாட்சியர் கொலை முயற்சி வழக்கை நீர்த்துபோக செய்யும் காவல்துறை;அதிர்ச்சியில் வருவாய் துறையினர்

Published on 18/09/2018 | Edited on 18/09/2018

சிதம்பரம் அருகே நரபலி சாமியார் ஒருவர் கோட்டாட்சியரை கொலை செய்ய முயன்ற வழக்கை நீர்த்துபோக செய்யும் அளவுக்கு காவல்துறையினர் செயல்படுவது வருவாய் துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சேத்தியாதோப்பு குறுக்கு சாலையில் ஆறுமுகசாமி என்ற நரபலி சாமியார் கருப்புசாமி என்ற கோயிலை கட்டிகொண்டு மதுபான போதையில் சுருட்டை புகைத்தாவாறு குறிசொல்வது வழக்கம். இவர் மீது நரபலி கொடுத்தது உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது. இந்த நிலையில் இவர் கோயிலுக்கு பின்புறம் பிரதான நீர்வழி வாய்காலை ஆக்கிரமித்து மூன்று மாடி கட்டிடம் மற்றும் நீளமான கட்டிடம் ரூ 1 கோடி செலவில் கட்டி ஆக்கிரமித்துள்ளார். இதனை அப்புறபடுத்த வேண்டும் என்ற நீதிமன்ற உத்திவிட்டும் அப்புறபடுத்தாமல் சாமியார் காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளை சரிசெய்து கொண்டு காலம் கடத்தி வந்துள்ளார்.

 

murder

 

இந்நிலையில் சிதம்பரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் குமார் உள்ளிட்ட வருவாய் மற்றும் பொதுப்பணித்துறை, காவல் துறையினர் ஆக்கிரமிப்பில் உள்ள கட்டிடத்தை இடிக்க சென்றனர். அப்போது ஆக்கிறமிப்பை அகற்றகூடாது என்று ஆறுமுகசாமி அவரது ஆதரவாளர்கள் மண்ணெண்னையை உடலில் ஊற்றிகொண்டு கோட்டாட்சியர் மீதும் மண்ணெண்ணையை ஊற்றி கொலை செய்ய முயற்சித்துள்ளனர். இதுகுறித்து கோட்டாட்சியர் ராஜேந்திரன் ஆறுமுகசாமி மற்றும் ஆதரவாளர்கள் என்மீது மண்ணெண்னை ஊற்றி கொலை செய்ய முயன்றார்கள் என்று சேத்தியாதோப்பு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து சாமியார் மீது கடுமையான பிரிவில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையினருக்கு உத்திரவிட்டார். மேலும் இதுபோன்ற சம்பவத்திற்கு போதுமான எண்ணிக்கையில் காவலர்களை நியமிக்காதது குறித்து காவல்துறையினரிடம் கோபம் அடைந்துள்ளார்.

 

 ஆனால் சேத்தியாதோப்பு காவல்துறையினரோ கோட்டாட்சியர் கொடுத்த புகாருக்கு சரியான பிரிவில் வழக்கு பதிவு செய்யாமல் வழக்கில் இருந்து விரைவில் வழக்கில் இருந்து வெளிவரும் வகையில் சாமியாருக்கு சாதகமான முறையில் வழக்கு பதிவு செய்துள்ளனர். சாமியார் சம்பவ இடத்திலே காவல்துறையினரிடம் சிரித்து பேசி குளாவி வருகிறார். சம்பவம் நடந்து 24 மணி நேரத்திற்கு மேல் ஆகியும் சாமியாரை கைது செய்ய காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை அறிந்த வருவாய்துறையினர் கோட்டாட்சியருக்கே இந்த நிலமை என்றால் சாதரன ஊழியர்களை காவல்துறையினர் எப்படி நடத்துவார்கள் என்று அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

இதுகுறித்து சேத்தியாதோப்பு காவல்ஆய்வாளர் ராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில் இந்த வழக்கு விசாரணையில் ரெபர் செய்யப்படும். நாங்க தான் திங்களன்று இடிக்கவேண்டாம் என்று கூறினோமே இவர் ஏன் வந்தார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

 

ஆறுமுகசாமி என்ற போலிசாமியார் மக்களை தவறான முறையில் வழிநடத்துகிறார். இவரால் பலர் பாதிக்கப்பட்டு வழக்குதொடுத்துள்ளார். நரபலி உள்ளிட்ட வழக்குகள் இவர்மீது உள்ளது. இதனை கண்டித்து புவனகிரி ஒன்றிய மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்களை நடத்தப்பட்டுள்ளது. மேலும் தற்போது இந்த சம்பவத்தில் காவல்துறையினர் சாமியாரிடம் கைகோர்த்துகொண்டு கோட்டாட்சியரை கொலை செய்ய முயன்ற வழக்கை நீர்த்து போக செய்யும் அளவுக்கு செயல்படுவது கண்டிக்கதக்கது. கோட்டாட்சியர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வெளிவரமுடியாத பிரிவில் வழக்கு பதிந்து கைது செய்து தக்க தண்டனை அளிக்கவேண்டும் என்று புவனகிரி ஒன்றிய மார்க்சிஸ்ட் கட்சியின் செயலாளர் சதானந்தம் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.