Published on 18/03/2018 | Edited on 18/03/2018
![pondy 1](http://image.nakkheeran.in/cdn/farfuture/j8pzph9j2mlowIaWZw2108mQA7QA7ZFiSm_plfLpvXQ/1533347628/sites/default/files/inline-images/IMG_20180318_104007.jpg)
புதுச்சேரி, வில்லியனூர் பகுதியில் நேற்று இரவு திராவிடர் கழகம் சார்பில் மணியம்மையார் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய பேச்சாளர்கள், நிர்வாகிகள் இந்து தெய்வங்களை தரக்குறைவாக விமர்சித்ததாக கூறி, கூட்டம் நடந்த இடத்திற்கு சென்ற பா.ஜ.க, இந்துத்துவ அமைப்பினர் கூட்டத்திற்கு முன்பு எதிர்ப்பு முழக்கங்கள் எழுப்பியவாறு சென்றனர்.
![pondy 1](http://image.nakkheeran.in/cdn/farfuture/agGGI19iVp-pHd_yxn2qSsk498HzMhBl-49pTUN4uaU/1533347626/sites/default/files/inline-images/IMG-20180318-WA0026.jpg)
அத்துடன் கூட்டத்தின் நடுவில் புகுந்து ரகளையில் ஈடுபட்டனர். அப்போது கூட்டத்திலிருந்தவர்களுக்கும் பா.ஜ.கவினருக்கும் அடிதடி ஏற்பட்டது. பாதுகாப்புக்கு இருந்த காவலர்கள் இருதரப்பினரையும் விரட்டி கலைத்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.