Skip to main content

தலை துண்டித்து வாலிபரை கொலை செய்த வழக்கில் 6 பேர் கைது!

Published on 25/09/2021 | Edited on 26/09/2021

 

dindigul district incident police investigation

 

திண்டுக்கல் அருகே தலை துண்டித்து வாலிபரைக் கொலை செய்த வழக்கில் 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

செப்டம்பர் 22- ஆம் தேதி அன்று திண்டுக்கல் அருகே உள்ள ஆனந்தன் கோட்டை கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளியை மர்மநபர்கள் வெட்டி தலைவன்கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே வீசி சென்றுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்ததும் திண்டுக்கல் தாலுகா காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று அவரது உடலைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வட்டப்பாறை அரசு ஆரம்பச் சுகாதார நிலையம் அருகே அவரது உடல் கிடந்தது.

 

இதனையடுத்து, காவல்துறையினர் கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த நிலையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த சிவகுமாருக்கும், சிவனுக்கும் சட்டவிரோதமாக சில்லறையில் மதுபானங்கள் விற்பனை செய்வதில் பிரச்சனை இருந்து வந்துள்ளது.  இதனால் இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.  தலையை வீசி சென்ற இடத்திலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

 

அதனைத் தொடர்ந்து எஸ்.பி. சீனிவாசன் உத்தரவின் பேரில் ஏ.டி.எஸ்.பி. அருண் கபிலன் மேற்பார்வையில் காவல்துறை இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தினகரன் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளியை வலை வீசித் தேடி வந்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக சாமியார் பட்டியைச் சேர்ந்த மன்மதன் கார்த்திகேயன், பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த சங்கரபாண்டி, மருதீஸ்வரர், தேனியைச் சேர்ந்த ராம்குமார், மணிகண்டன், ராஜா ஆகிய 6 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

 

இவர்கள் அனைவரும் மதுபான விற்பனையில் கைதான அனுமன் கோட்டையைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகர் இன்பராஜின் கூட்டாளிகள் ஆவர். அதோடு இன்பராஜ் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 11,500 மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனை காவல்துறையினருக்கு ஸ்டீபன் தான் தெரிவித்திருக்க வேண்டும் என்று சந்தேகம் அடைந்தனர். அதனால் அனுமந்தராயன் கோட்டையில் செப்டம்பர் 22- ஆம் தேதி அன்று மாலை மது குடித்துக் கொண்டிருந்த ஸ்டீபனை மேற்படி கும்பல் வெட்டியது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அந்த ஆறு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.

Next Story

திண்டுக்கல்லில் காவி நிறத்தில் வந்தே பாரத்?

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மதுரையில் இருந்து பெங்களூருக்கு காவி நிறத்தில் வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மக்களவை தேர்தல் முடிந்தவுடன் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வந்தே பாரத் ரயில் திண்டுக்கல், கரூர், சேலம், தர்மபுரி, ஓசூர் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும் எனவும் கூறப்படுகிறது. மதுரை பெங்களூரு இடையே 435 கிலோமீட்டர் தூரத்தையும் 5.30 மணி நேரத்தில் வந்தே பாரத் கடக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.