Skip to main content

தினகரனை எரிச்சலூட்டிய ஒ.எஸ்.மணியன்

Published on 26/09/2018 | Edited on 26/09/2018
ttv-maniyan



நாகையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு பயணத்தில் பேசிய டி.டி.வி. தினகரன் ஆர்.கே.நகரை போல திருவாரூர் மற்றும் திருபரங்குன்றம் இடைதேர்தலிலும் வெற்றிபெறுவோம் என சூளுரைத்தார்.
 

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் மக்கள் சந்திப்பு பயணத்தை இரண்டாவது நாளாக திருக்குவளையில் துவங்கினார். அதனை தொடர்ந்து நாகை வந்த அவருக்கு அந்த அக்கட்சியினரால், மேளதாளத்துடன், மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். 
 

தொண்டர்களின் கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், "நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்கள் விரைவில் வரப்போகிறது. இந்த நாகை தொகுதி வேட்பாளர் யார் என்று உங்களுக்கு தெரியும் மாவட்ட செயலாளர் சந்திரமோகன் தான்.  அவரை தோற்கடிக்க எந்த மணியும் வந்தாலும் முடியாது (பணத்தையும், ஒ.எஸ்.மணியனையும் குறிப்பிட்டே மணி என்றார்) அவரை வரும் தேர்தலில் மகத்தான  வெற்றிபெற செய்யவேண்டும். ஆர்கே.நகர் தேர்தலை  போலவே நடந்துவரும் அடிமை பழனிச்சாமி துரோக ஆட்சிக்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் வரப்போகும் திருவாரூர் மற்றும் திருபரங்குன்றம் இடைதேர்தலிலும் வெற்றிபெறுவோம் என்றார்.
 

நாகை பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இருக்கும் ஏரியாவான காடம்பாடியில் 58 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த ராட்சத கொடிமரத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொடியினை ஏற்றினார். அதனை தொடர்ந்து புகழ்பெற்ற  நாகூர் தர்கா பகுதியிக்கு சென்றவர்  குல்லா அணிந்துகொண்டு அங்கு குழுமியிருந்த மக்களிடம் உரையாற்றினார். 
 

அப்போது அங்கு கூடியிருந்தவர்களில் சிலர், பக்கத்தில் இருக்கும் காரைக்கால் தனியார் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியால் எங்களின் வாழ்வாதாரமே சிதையுது, அதப்பற்றி பேசுங்க இல்லன்னா இங்கிருந்து கிளம்புங்க என்று கோஷங்கள் எழுப்பியதால் சிறிது நேரம்  பரபரப்பு ஏற்பட்டது. பிறகு பேசவந்ததை குறைத்துப்பேசிவிட்டு சென்றார்.
 

ஏற்கனவே நாகை அவுரித்திடலில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டிருந்த கொடிகம்பத்தை அதிமுக அமைச்சர் ஒ,எஸ்,மணியனின் உத்தரவின் பெயரில் காவல்துறையினரோடு நகராட்சி ஊழியர்கள் இடித்து அப்புறப்படுத்தினர். இந்த கோபத்தில் இருந்த தினகரனுக்கு நாகூரிலும் தனது ஆட்களை கூட்டத்தில் புகுத்தி இடையூறு செய்யவைத்திருக்கிறாரே என்கிற எரிச்சலில் ஒ.எஸ்.மணியன் குறித்து அனைத்துவிதமான தவறுகள், மோசடிகள் குறித்து தயாரிக்குமாறு தனது ஆதரவாளர்களிடம் இன்ஜக்சன் கொடுத்துவிட்டே சென்றிருக்கிறார். விரைவில் ஒ.எஸ்.மணியன் மற்றும் அவரது பினாமிகளை கண்டித்து ஆர்பாட்டம் நடக்கும்  என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஒரு சீட்டை டி.டி.வி.தினகரன் காலில் விழுந்து பெற்றிருக்கிறார்” - தங்க தமிழ்ச்செல்வன்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Thanga tamilselvan was severely criticized by T.D.V.Thinakaran

திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனாவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்காக தேனி நேரு சிலை மும்முனை சந்திப்பில் இருந்து ஊர்வலமாக திறந்த ஜீப்பில் வந்தார். அவருடன் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி  மூர்த்தி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஐந்தாயிரத்திற்கு மேற்பட்டோர் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். பின்னர் தேர்தல் நடத்தும் அதிகாரியான ஷஜீவனாவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் மத்தியில் அமைச்சர்கள் முன்னிலையில் தங்க தமிழ்ச்செல்வன் பேசும்போது, “முல்லைப் பெரியாறு அணை, பேபி அணை பலப்படுத்தி ஐந்து மாவட்ட மக்களின் நீர் ஆதாரம் பாதுகாக்கப்படும். திண்டுக்கல் - சபரிமலை ரயில் திட்டம் கொண்டு வரப்படும். போக்குவரத்து நெரிசல் மிகுந்த தேனி, உசிலம்பட்டி, போடி ஆகிய  பகுதியில் புறவழிச்சாலைகள் புதிதாக அமைக்கப்படும்.

டிடிவி தினகரன் வனவாசம் சென்று வந்தது போல உள்ளது. மீண்டும் தேனி வந்தது என்று கூறுகிறாரே என்ற கேள்விக்கு ? அவர் அப்படியே சென்று இருக்கலாம் .தேர்தல் என்பது மக்களோடு மக்களாக களத்தில் இருந்து அவர்களின் குறைகளை கேட்டறிந்திருக்க வேண்டும். 14 வருடம் வன வாசம் சென்று மீண்டும் வந்திருப்பதாக கூறும் டிடிவி தினகரன், அப்படியே சென்றிருக்க வேண்டியது தானே, ஏன் மீண்டும் வந்தார்? பாஜக உடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்று கடுமையாக விமர்சித்த டிடிவி தினகரன், ஒரு சீட்டை காலில் விழுந்து பெற்று இருக்கிறார்.

செல்வாக்கை நிரூபிக்க ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் தனித்து சுயேட்சையாக போட்டியிட வேண்டும். இந்தியா கூட்டணி பிரதமர் வேட்பாளர் யார் என்று டிடிவி.தினகரன் கேட்கிறார் என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், இந்தியா கூட்டணி வெற்றி பெறும் அதன் பின்னர் பிரதமர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார். இதைப்பற்றி தினகரன் கவலைப்பட வேண்டாம்” என்று கூறினார்.

Next Story

“இ.பி.எஸ்.உடன் எந்த காலத்திலும் அமமுக இணைந்து செயல்படாது” - டிடிவி தினகரன் 

Published on 04/02/2024 | Edited on 04/02/2024
Ammk will never work with EPS says TTV Dhinakaran

திண்டுக்கல்லில்  மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம்  நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டார்.

இக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் டி.வி.வி. பேசுகையில், “நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் உறுதி யாக கூட்டணி அமைத்து  தேர்த லை நாங்கள் சந்திப்போம். கூட்டணி குறித்து பேச்சு வார்த்தைகள் முடிந்த பிறகு செய்தியாளர்கள் மத்தியில் அறிவிக்கப்படும். துரோக சக்தியான எடப்பாடி பழனிச்சாமி உடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எந்த காலத்திலும் பயணிக்காது. எடப்பாடி பழனிச்சாமி என்ற துரோகியுடன் எந்த காலத்திலும் நாங்கள் இணைந்து செயல்பட மாட்டோம். நாடாளுமன்றத் தேர்தலிலும் அவருடன் இணைந்து போட்டியிடமாட்டோம். 

அம்மாவின் உண்மை விசுவாசிகளான அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். ஓ.பன்னீர் செல்வத்துடன் இணைந்து தேர்தலை நாங்கள் சந்திக்க உள்ளோம். எடப்பாடி பழனிசாமிக்கு துரோகத்தை தவிர வேறு எதுவும் தெரியாது. நான்கரை ஆண்டு காலம் அதிமுக ஆட்சியை காப்பாற்றி கொடுத்தது யார் என்பது சின்ன குழந்தைக்கு கூட தெரியும். எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்கியவருக்கு துரோகம், இந்த ஆட்சியை பாதுகாத்து கொடுத்தவர்களுக்கும் துரோகம், தமிழ்நாட்டு மக்களுக்கும் துரோகம், எடப்பாடி பழனிசாமி துரோகம் என்ற கத்தியை கையில் எடுத்து உள்ளார். அந்த கத்தியாலேயே அரசியல் ரீதியாக எடப்பாடி பழனிச்சாமி வீழ்வார். எடப்பாடி பழனிச்சாமி 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என பகல் கனவு காண்கிறார். துரோகம் என்றைக்குமே ஜெயிக்கப் போவதில்லை. அது வீழப்போகும் நேரம் வந்து விட்டது. பாராளுமன்ற தேர்தலில் பல கட்சிகளுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அது உறுதியான பிறகு தகவல் தெரிவிக்கப்படும்.

திமுகவின் மூன்றாண்டு கால ஆட்சியில் விவசாயிகள் இளைஞர்கள் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போக்கு வரத்து தொழிலாளர்கள் அனைத்து சமுதாய மக்களும் அனைத்து தரப்பினரும் ஏண்டா இந்த ஆட்சியை கொண்டு வந்தோம் என மிகவும் வருத்தத்துடன் உள்ளனர். இந்தக் கோபம் இந்த பாராளுமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்தப் போகிறது. இந்தியா கூட்டணி எங்கு இருக்கிறது என்பது தெரியாமல் போய்விட்டது” என்றார்.

பழைய அதிமுக மீண்டும் உருவாக வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு :- பதில் அளித்த டிடிவி தினகரன், அம்மாவின் விசுவாசிகள் அனைவரும் ஒன்றாக உள்ளோம். அதனை ஏற்க எடப்பாடி பழனிச்சாமி மறுத்து வருகிறார். அம்மாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும் என்பதுதான் நிலைப்பாடு. ஆனால் பழனிச்சாமி போன்ற சுயநலவாதிகள் அதனை தடுக்கின்றனர் என்று கூறினார்.