Skip to main content

தினகரனுக்கு மாஸ்டரே செயல்தலைவர்தான்- ஜெயக்குமார்

Published on 11/06/2018 | Edited on 11/06/2018

 

சென்னை ராயபுரத்தில் உள்ள ஒரு பள்ளி விழாவில் கலந்துகொண்ட தமிழக மீன்வளத்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது,

 

தொடர் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ள ஜாக்டோ ஜியோ அமைப்பினருடன் பல முறை பேச்சுவார்தை நடத்தியாயிற்று தற்போது சட்டமன்றம் கூடும் நிலையில் அதுபற்றி கருத்து கூறமுடியாது. ஏற்கனவே அரசின் நிலையை அறியும்படி பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்பட்டது எனவே அரசின் நிலைப்பாடு எல்லோருக்கும் எல்லாம் செய்யவேண்டும் என்பதுதான் ஆனால் சட்டியில் இருந்தால்தானே  அகப்பையில் வரும் என்பது அவர்களுக்கும் தெரியும் எனவே நிச்சயமாக அவர்களும் உணர்வார்கள்.

 

jayakumar

 

தண்ணீர் திறக்க முடியாது என்று சொன்ன ஒரே முதமைச்சர் எடப்பாடி என டிடிவி.தினகரன் கூறியுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது.  நேற்றுக்கூட அவர் பதினெட்டாம் படி என்றும் கூறியுள்ளார் அவர் என்ன சபரிமலை சாமியா ?, புலிப்பால் கொண்டுவருபவரா அவர் ?  வேறும் மனப்பால் குடிப்பவர் எனவே அதுவெல்லாம் எடுபடாது.

 

தினகரன் எம்.பி.யாக இருக்கும்பொழுது பாராளுமன்றத்தில்ஒரு தடவைகூட காவிரி பற்றி பேசவில்லை சட்டமன்றதில்  நாங்களெல்லாம்  அம்மா பற்றியும் எம்ஜிஆர் பேரையும் சொல்லிதான் பேச தொடங்குவோம் ஆனால் அவரோ பேசுவதே நான்கு வார்த்தைதான் அதிலும் அம்மா பற்றி ஒரு வார்த்தைகூட பேசுவதில்லை. திமுகவுடன் சேர்ந்து அவர்களுடைய குரலைத்தான் அவர் பிரதிபலித்து கொண்டிருக்கிறார் எனவே தினகரனுக்கு மாஸ்டரே செயல்தலைவர்தான்.

 

தமிழக அரசு வீணாக செலவளிக்கிறது என்ற அன்புமணி ராமதாஸின் குற்றசாட்டு ஏற்புடையதல்ல, இன்று தமிழகத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், நெசவாளர், கைத்தறி தொழிலாளர், மீனவர், விவசாயிகள்  என எல்லாதரப்பு மக்களுக்கும் அரசு புதுபுது திட்டங்களை செய்து வருகிறது.  இன்று தமிகத்தில் என்ன வளர்ச்சி  இல்லை  ரோடு இருக்கிறது, கரண்ட் இருக்கிறது கனெக்டிவிட்டி இருக்கு இதையெல்லாம் அவர் நிறுத்த சொல்கிறாரா? சும்மா பொத்தம்பொதுவாக சொல்லக்கூடாது எனக்கூறினார். 

 

நடிகர் கருணாஸ் ஆட்சிமாற்றம் விரைவில் வரும் எனக்கூறியுள்ளாரே என்ற செய்தியாளரின் கேள்விக்கு ''காலையில ஒரு வாய் நைட்டு ஒரு வாய்'' என பதிலளித்தார்.   

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்