Skip to main content

தருமபுரி, ஈரோடு, பெரம்பலூர் மருத்துவமனைக்கு புதிய டீன்!- சுகாதாரத்துறைச் செயலாளர் உத்தரவு!

Published on 05/04/2020 | Edited on 05/04/2020

அரசு மருத்துவக்கல்லூரிகளில் பணியாற்றி வந்த பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கும் வகையில், தருமபுரி, ஈரோடு, பெரம்பலூர் உள்ளிட்ட மூன்று மாவட்ட அரசு மருத்துவமனைக்கு தற்காலிக புதிய டீன்களை நியமனம் செய்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார். 

dharmapuri and erode, perambalur government hospital deens appointed


அதன்படி தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் டீனாக திருச்சியில் பணியாற்றிய பூவதி நியமிக்கப்பட்டுள்ளார். ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீனாக கோவையில் பணியாற்றிய ஆர்.மணி நியமிக்கப்பட்டுள்ளார். பெரம்பலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீனாக வேலூரில் பணியாற்றிய தேரணிராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்