Skip to main content

எடப்பாடி  ஆட்சிக்கு நாட்கள் எண்ணப்படுகிறது! டிடிவி பேட்டி!

Published on 16/07/2018 | Edited on 16/07/2018
ttv


திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் பல் வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அம்மா முன்னேற்ற கழகத்தின் மாநில செயலாளரும் ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினருமான டிடிவி தினகரன்  திண்டுக்கல் வந்தார். அதையொட்டி  பெருந்தலைவர் காமராஜரின் 116 வது பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல்லில் உள்ள  காமராஜர்  சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 
           அதற்கு முன்பு பிரபல ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருந்த டிடிவி தினகரன் பத்திகையாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்த போது.....’’தற்பொழுது தமிழகத்தில் நடைபெறும் எடப்பாடி அரசு கோமா நிலையில் உள்ளது.  தற்பொழுது முட்டையில் மட்டும் ஊழல் செய்யவில்லை.  எல்.இ.டி.பல்பு உள்பட அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளது. இப்படிப் பட்ட எடப்பாடி ஆட்சியின் நாட்கள் தான் எண்ணப்பட்டு வருகிறது.   அமைச்சர் வேலுமணி பொய்யான தகவலை  தந்து கொண்டு  இருக்கிறார். 

மறைந்த முதல்வர்  அம்மா தலைமையில் நடந்த  வெற்றியை போல் வருகிற பாராளுமன்ற தேர்தலில்  37  தொகுதிகளிலும் அதன் பின் சட்டமன்ற  தேர்தலில் 200க்கும் மேற்பட்ட  இடங்களை அம்மா முன்னேற்ற கழகம் வெற்றி பெறும்.  இதின் மூலம் அடுத்த  பிரதமரை தேர்ந்து எடுக்கும் சக்தியாக உருவெடுப்போம்  மத்திய  அரசு தமிழக அரசை ஊழல் அரசு என குற்றம் சாட்டி வருகிறது. அப்படி இருக்கும் போது எதற்காக  ஆட்சி நடைபெற அனுமதிக்கிறது என தெரிய வில்லை.

  இனி எந்த  காலத்திலும் தமிழகத்தில் தேசிய கட்சி ஆட்சிஅமைக்க முடியாது. லோக் ஆயுக்தா சட்டம் பல் இல்லாத பாம்பாக நிறைவேற்றப்பட்டுள்ளது.  இந்த ஆட்சியின் மீது நம்பிக்கை இல்லா  தீர்மானம் கொண்டு வரும்  சமயத்தில் ஸ்லீப்பர் செல்கள்  வெளிவருவார்கள்.  தற்பொழுது எடப்பாடி  போட துடிக்கும்  எட்டு வழி சாலை மக்களுக்கான திட்டம்  கிடையாது. ஆட்சியில் இருப்பவர்கள் தங்கள் சொந்த  தேவைக்காக நிறைவேற்ற துடிக்கிறார்கள் என்று  கூறினார். அதன் பின் நகரில்  சில நிகழ்சியில் கலந்து  கொண்டு விட்டு  செம்பட்டி,  வத்தலக்குணடு வழியாக தேனி சென்ற டிடிவி  தினகரனுக்கு  அங்கங்கே கட்சி தொண்டர்கள் பெரும் வரவேற்பு  கொடுத்தனர்.  டிடிவியோடு தங்க தமிழ் செல்வன்,  திண்டுக்கல்  புற நகர்  மாவட்ட செயலார்  ராமுத்தேவர்  உள்பட  கட்சி  நிர்வாகிகள்  மற்றும்  தொண்டர்களும் பெரும் திரளாக கலந்து  கொண்டனர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட டி.டி.வி. தினகரன்..! (படங்கள்)

Published on 19/03/2021 | Edited on 19/03/2021

 

2021ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு குறைந்த நாட்களே இருக்கின்ற நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமமுக கட்சித் தலைவர் டி.டி.வி தினகரன், அவரது வேட்பாளர்களை ஆதரித்து தொடர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் வேளச்சேரி தொகுதியின் அமமுக  வேட்பாளர் சந்திர போஸை ஆதரித்து டி.டி.வி. தினகரன் வேளச்சேரி காந்தி சாலையில் பிரச்சாரம் செய்தார். 

 

 

Next Story

சசிகலா தமிழகம் வருகை... அமமுகவினர் உற்சாக வரவேற்பு!! (படங்கள்)

Published on 08/02/2021 | Edited on 08/02/2021

 

 

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடிந்து பெங்களூருவிலிருந்து தமிழகம் வரும் சசிகலாவிற்கு வழிநெடுகிலும் 57 இடங்களில் வரவேற்பு கொடுக்க அமமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர். கர்நாடகா - தமிழக எல்லையான ஜூஜூவாடியில் மேளதாளம் முழங்க 5 ஆயிரம் பேர் சசிகலாவை வரவேற்றனர்.

 

அதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் வழியாக சென்னை அழைத்து வரப்படுகிறார் சசிகலா. சென்னை எல்லையான செம்பரம்பாக்கம் தொடங்கி நசரத்பேட்டை, குமணன்சாவடி, போரூர், கிண்டி கத்திப்பாரா என தியாகராய நகர் வரை 32 இடங்களில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. சசிகலாவை வரவேற்று சென்னையின் பெரும்பாலான இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.