Skip to main content

பாரதிதாசன் பல்கலைகழகத்தில் மரங்கள் வெட்டி கொள்ளை

Published on 19/09/2018 | Edited on 19/09/2018
Cut trees robbery

                                                                                                                       படம் மாடலே

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகம் 600க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ளது. இது திருச்சி புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் உள்ளது. இங்கு வனப்பகுதி போன்று மரங்கள் அடர்ந்து காணப்படும். இங்கே புதிதாக பொறுப்பேற்ற துணைவேந்தர் மணிசங்கர், ஆசிரியர்களிடம் மாணவர்களுக்காக தான் நாம். மாணவர்களின் நலனில் அக்கரை காட்ட வேண்டும் என்று பேசியுள்ளார். ஆனால் கொஞ்ச நாளில் படிக்கும் மாணவர்களின் கட்டணம், முதல் பல மடங்கு உயர்த்தியுள்ளார். 
 

பல்கலைகழகத்தில் துய்மைப்படுத்துகிறோம் என்கிற பெயரில் பல மோசடிகள் நடந்து கொண்டிருக்கிறது. இதை துணை வேந்தர் கண்டுகொள்ளவில்லை என்கிறார்கள் இந்த மிகப்பெரிய இந்த வளாகத்தில் காய்ந்து போன மரங்கள் மற்றும் வளராத மரங்களை அவ்வப்போது கான்டிராக்டர்கள் மூலம் வெட்டி அகற்றுவது வழக்கம். அந்த வகையில் தற்போது பல்கலை. வளாகத்தில் உள்ள தேவையற்ற மரங்களை வெட்டியெடுக்க, புலியூரைச் சேர்ந்த பழனிவேல் என்பவர் கான்டிராக்ட் எடுத்துள்ளார்.
 

இந்நிலையில் கடந்த 16ம் தேதி முனீஸ்வரன் கோவில் பகுதியில் மரங்களை வெட்டிய கான்டிராக்டர், அப்பகுதியில் உள்ள காய்ந்த மரங்களோடு, வேம்பு, நொனா, வேலா உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட பச்சை மரங்களையும் வெட்டி வெளியே கொண்டு செல்ல முயன்றார்.
 

இதைக் கண்ட பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள், இது குறித்து, துணைவேந்தர் மணிசங்கரிடம் புகார் அளித்தனர். அவர் உடனடியாக மரங்களை வெளியே எடுத்துச் செல்லக்கூடாது என்று உத்தரவிட்டதுடன் விசாரணை நடத்தவும் நடவடிக்கை எடுத்தார். இந்த பணிகளை கண்காணிக்க வேண்டிய பணியில் இருக்கும் பல்கலை. அலுவலர்கள் அலெக்சாண்டர், அழகேசன் ஆகியோர் இந்த மர கடத்தலுக்கு உடந்தையாக இருக்கலாம் என்று மாணவர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
 

இது குறித்து நவல்பட்டு போலீசில் புகார் அளிக்கவும் பல்கலை. நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பசுமை வளாகம் என்ற அழைக்கப்படும் பாரதிதாசன் பல்கலையில், பச்சை மரங்களை வெட்டி கடத்த முயன்ற சம்பவம், பல்கலை. மாணவர்கள், பேராசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

இந்த சம்பவம் குறித்து துணைவேந்தர் மணிசங்கர் கவனத்துக்கு கொண்டு சென்றது. உடனே விசாரிக்க சொல்கிறேன் என்றார். இதற்கு இடையில் பல்கலைகழக பதிவாளர் சார்பில் நவல்பட்டு காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாரதிதாசன் பல்கலை. நுழைவுத் தேர்வில் தொழில் நுட்பக்கோளாறு; மாணவர்கள் அவதி

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Ph.D Online Entrance Test conducted by Bharathidasan University Technical disorder

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 2024 ஆவது கல்வி ஆண்டுக்கான முனைவர் பட்ட (பிஎச்டி) நுழைவுத் தேர்வு இணைய வழியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 57 வகையான பாடப்பிரிவுகளில் 1092 மாணவ, மாணவியர் தேர்வுக்கு ரூ.2,000 முதல் ரூ. 2,100 வரை கட்டணமும் செலுத்தி விண்ணப்பித்திருந்தனர். ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி முதல் புகல் 12.15 மணி வரை நுழைவு தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் தேர்வாளர்களுக்கு தேர்வெழுத பிரத்யேக லாகின் ஐடி(ID) மற்றும் ரகசிய குறீயீடு உள்ளிட்டவைகளும் பல்கலைக்கழகம் சார்பில் வழங்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து திருச்சி மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து நுழைவு தேர்வு எழுத மாணவ,மாணவியர் பல்கலைக்கழக இணையதள முகவரியில் லாக் இன் செய்தனர். ஆனால் பல்கலைக்கழக இணையதளம் செயல்படவில்லை. இதனால் ஏராளமான மாணவர்கள் நுழைவு தேர்வு எழுத முடியாமல் அவதிக்குள்ளாகினர். 

பின்னர் தொடர்ந்து பல முறை முயற்சி செய்தும் பலன் இல்லை. இதனால் மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தொடர்பு கொண்டு கேட்டபோது சர்வரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இணையதளம் செயல்படவில்லை என்று தெரிவித்தனர்.

இது தொடர்பாக பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சீனிவாச ராகவன் கூறுகையில், “ஞாயிற்றுக்கிழமை முனைவர் பட்ட (பிஎச்டி) நுழைவுத் தேர்வு இணைய வழியில் நடைபெற்றது. இதில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சில மாணவர்களுக்கு தேர்வு எழுத முடியவில்லை. மேலும் இதில் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியருக்கு பணம் செலுத்தாமல் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும். மறு தேர்வுக்கான தேதி மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்” என்றார்.

Next Story

நூதன முறையில் திருடிய கொள்ளையர்கள்; கள்ளக்குறிச்சியில் துணிகரம்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
Robbery with metal detector; Venture in Kalakurichi

கள்ளக்குறிச்சியில் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் நூதன முறையில் எந்த பகுதியில் நகைகள் உள்ளது என கண்டறிந்து கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் உள்ள எஸ்.வி.பாளையம் பகுதியில் வசித்து வருபவர் அருள்ஜோதி. அரசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவரின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்களால் 67 சவரன் நகை மற்றும்  23 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது.

இது குறித்து போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை செய்து வந்த நிலையில், வளவனூர் பகுதியைச் சேர்ந்த மாரி என்பவர் அவருடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. உதயா மற்றும் மாரி ஆகிய இருவரை கைது செய்த போலீசார், உருக்கப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருந்த கொள்ளை அடிக்கப்பட்ட 25 சவரன் தங்கத்தை கைப்பற்றினர். மேலும் 2 லட்சம் ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.

இந்த கொள்ளை வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் தங்க நகை எங்கே இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள மெட்டல் டிடெக்டரை பயன்படுத்தி இவர்கள் கொள்ளையடித்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.