Skip to main content

அசல் பேப்பரில் கள்ள நோட்டு: அன்னிய சதியா! களமிறங்கிய தேசிய புலனாய்வு முகமை!!

Published on 06/07/2018 | Edited on 06/07/2018

நெல்லை மாவட்டத்தின் சங்கரன்கோவில் நகரில் நெல்லை உளவுப் பிரிவான திட்டமிட்ட குற்றங்களின் புலனாய்வு யூனிட்டின் டீம், நான்கு பேரை மடக்கியதில் அவர்களிடமிருந்து கை மாற்றத் திட்டமிட்டிருந்த 2.93 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளைக் கைப்பற்றினர் அந்தக் கும்பல் வந்த ஒம்னி காரையும் பறிமுதல் செய்தவர்கள் அவர்களிடம் முறைப்படி விசாரணை மேற்கொண்டதில் கொலை வழக்கு ஒன்றில் சிக்கி சஸ்பெண்ட் ஆன சிறப்பு எஸ்.ஐ. சண்முகம் ஏஜண்ட் மகாலிங்கம், சங்கர்கணேஷ் மற்றும் ஷெரீப் என்கிற விபரம் தெரிய வந்தது.

இது தொடர்பான செய்தியினை நக்கீரன் இணையதளம் கடந்த வாரம் வெளிப்படுத்தியிருந்தது. அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஸ்கேனிங் மெஷின், கலர் ஜெராக்ஸ் பிரிண்டர் கட்டிங் சாதனம் போன்றவைகளைக் கொண்டு கள்ள நோட்டு தயாரிப்ப பற்றிய டெமான்ஸ்ட்ரேஷன் செய்து கட்டடும்படி விசாரணை டீம் சொல்ல. அவர்கள் அவைகள் மூலமாக கள்ள நோட்டு தயாரிப்பதைச் செய்து காட்ட நோட்டைப் பார்த்த போலீசாருக்கு அதிர்ச்சி. காரணம் அது அசல் நோட்டைப் போலிருந்தது.
 

கரன்சிகள் மட்டுமே அச்சடிக்கப் பயன்படும் அந்த வகைப் பேப்பர் தொடர்பான விசாரணைக்குத் தப்பிய கள்ள நோட்டுத் தயாரிப்பு புள்ளியான அசனுக்குத்தான் தெரியும் என்றிருக்கிறார்கள். அவனை ஷேடோ செய்ததில் அவன் கேரளாவில் பதுங்கியது தெரியவர, இந்த சம்பவம் கேரளாவின் கொல்லம் மாநகர் போலீஸ் கமிசனர் அருளுக்குத் தெரியப்படுத்தப்பட்டதில் பேப்பர் பற்றிய சந்தேகமும் குறிப்பிடப்பட்டுள்ளதாம்.
 

 

 

இந்த நிலையில் கேரளாவின் இடுக்கி அணைக்கரையில் மூன்று நாட்களுக்கு முன் போலீஸ் நடத்திய போலீஸ் தணிக்கையில் அந்தப் பகுதியில் திரிந்தவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 2.5 லட்சம் மதிப்பிலான நோட்டுக்கள் அத்தனையும் கள்ள நோட்டு என்று தெரியவர, இடுக்கியைச் சேர்ந்த லியோ, கருநாகப்பள்ளியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார், புற்றடிப் பகுதியின் ரவீந்திரன் என்பது தெரிய வந்திருக்கிறது. அவர்களிடம் நடநத்தப்பட்ட விசாரணையில் அந்தக் கள்ள நோட்டுக்கள் கொல்லத்தில் தயாரிக்கப்படுவதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து கொல்லம் முளங்காடுப் பகுதியின் அந்த ஆடம்பர பங்களாவிற்குள் நுழைந்த தனிப்படை அங்கு ஏழு மணி நேரம் சோதனை நடத்தியதில் அங்கு கள்ள நோட்டு அச்சடிக்கப் பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர், பிரிண்டர் இங்க், அடுத்து ரிசர்வ் வங்கியின் போலிசீல், உள்ளிட்டவைகள் பறி முதல் செய்யப்பட்டன.

மேலும் அங்கு அச்சடிக்கப்பட்டிருந்த 57 லட்ச ரூபாய் கள்ள நோட்டுக்களும் சிக்கியுள்ளன. பார்த்தால் கள்ள நோட்டு என்று கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு அசல் ரூபாய் தாள் என்றும் தெரிய வந்திருக்கிறது. அதோடு ஒரு மடங்கு நல்ல நோட்டிற்கு மூன்று மடங்கு கள்ள நோட்டுக்களை சப்ளை செய்ததும் கண்டறியப்பட்டுள்ளது. என்று சொல்கிற கொல்லம் போலீசார், அந்தப் பங்களாவின் உரிமையாளரான மலையாள சீரியல் நடிகை சூர்யா சசி. அவரது தாய் ரமாதேவி, சகோதரி சுருதி ஆகியோரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 

இதில் குறிப்பிடும்படியான கள்ளக் கரன்சி அச்சடிக்கப்பயன் படுத்தப்பட்ட அசல் பேப்பர் பற்றிய சந்தேகம் கொல்லம் கமிசனர் அருளுக்குத் தெரியப்படுத்த அவர் நெல்லை மாவட்டத்தின் சங்கரன்கோவில் கள்ள நோட்டுச் சம்பவம், அடுத்து கொல்லம் பற்றியும், என்.ஐ.ஏ. எனப்படும் வெளி நாட்டுக்குச் சதியை அறியும், தேசிய புலனாய்வு முகமைக்குத் தெரியப்படுத்தியவர், அந்தப் பேப்பர் பற்றிய வெளி நாட்டு நெட்ஒர்க் பற்றியதையும் குறிப்பிட, தற்போது தேசிய புலனாய்வுமை முகமை தனது விசாரணையைக் கிளப்பியுள்ளது. இதையடுத்து பேப்பர் பற்றிய அதிர வைக்கும் நெட் ஒர்க் வெளி வரலாம் என்கிறார்கள் விசாரணை அமைப்பினர்.

 

சார்ந்த செய்திகள்