Skip to main content

"கரோனாவே போ!... போ!..." ஆடி, பாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய குழந்தைகள்!

Published on 01/05/2020 | Edited on 01/05/2020

 

Awareness


அரியலூர் மாவட்டத்தில் "கரோனாவே போ!.. போ!..." எனக் குழந்தைகள் ஆடிப் பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
 

அரியலூர் மாவட்டத்தின் திருமழப்பாடி கிராமத்தில் விரைவில் மக்கள் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தனிமனித இடைவெளி கடைபிடித்து, ஆங்கிலத்தில் எழுதிய பதாகைகளில் கரோனாவே போ... போ... எனவும் மக்களை வதைக்க வேண்டாம் என்பதனைக் குறிக்கும் வகையில் நோ... நோ... கரோனா எனவும் மக்கள் விரைவில் நலம் பெற வேண்டும் என்பதற்காகப் பதாகைகளை வைத்துக் கொண்டு பாடியும் ஆடியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


மேலும் கரோனா போக மக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் குழந்தைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கேட்டுக்கொண்டனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாணவர்களின் விழிப்புணர்வு மெளன நாடகம்; வாகன ஓட்டிகள் நெகிழ்ச்சி

Published on 05/11/2023 | Edited on 05/11/2023

 

School students awareness silent play Motorists are resilient

 

ஈரோடு மாவட்டம் திண்டல் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவியரின் சாலை போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ஈரோட்டின் மையப்பகுதிகளான ஆட்சியர் அலுவலகம், பன்னீர் செல்வம் பூங்கா மற்றும் காளை மாடு சிலை ஆகிய பகுதிகளில் உள்ள போக்குவரத்து சிக்னல்களில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் முதல்வர் சுப்புலட்சுமி தலைமை தாங்கி விழிப்புணர்வு மௌன நாடகத்தை தொடங்கி வைத்தார்.

 

அப்பொழுது, தங்கள் வருகைக்காக காத்திருப்பவர்கள் முன்னால், மௌன நாடகம் (MIME) மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பறை முழங்க இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் மூன்று பேர் பயணித்து விபத்தில் சிக்கி உயிர் இழக்கும் நிலை, மது போதையில் இருசக்கர வாகனத்தை இயக்கி இருசக்கர வாகன ஓட்டிகள் பாதிக்கப்படும் நிலை, இதனால் ஏற்படும் உயிர் சேதம், பொருள் சேதம், பாதிப்பு உள்ளிட்டவைகளை தத்ரூபமாக மௌன நாடகம் மூலம் அரங்கேற்றினர். இதனால் வாகன ஓட்டிகள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

 

மேலும், சாலை விதிகைளைப் பயன்படுத்தி, சீட்பெல்ட் அணிந்தும், ஹெல்மெட் அணிந்தும் வந்த வாகன ஓட்டிகளுக்கு பூங்கொத்து வழங்கி ஊக்குவித்தனர், விதிகளை மீறியவர்களுக்கு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய சிறிய வடிவிலான ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டன. இதில் 50 தனியார் மாணவ மாணவியர் மற்றும் 20 ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் பங்கேற்றனர். 

 

 

 

Next Story

பள்ளியில் சேர்ந்த பழங்குடி மாணவர்களுக்கு கிரீடம் அணிவித்து வரவேற்பு

Published on 03/07/2023 | Edited on 03/07/2023

 

nn

 

சிதம்பரம் அருகே கிள்ளை பேரூராட்சிக்குட்பட்ட எம்.ஜி.ஆர் நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதல் வகுப்பில் அப்பகுதியில் உள்ள இருளர் பழங்குடியின மாணவர்கள் 23 பேர் கல்வி கற்க புதிதாக இணைந்துள்ளனர்.

 

கிள்ளை பேரூராட்சி மன்ற துணை தலைவர் கிள்ளை ரவீந்திரன் தலைமையில் அவர்களுக்கு மாலை, தலையில் கிரீடம் அணிவிக்கப்பட்டு ஒரு வண்டியில் அமர வைத்து ஒலிபெருக்கி மூலம் கல்வி குறித்தும், கல்வி கற்றால் என்ன நன்மை கிடைக்கும் எனவும் இருளர் பழங்குடியின சமூக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

இதனைத் தொடர்ந்து புதியதாகக் கல்வி கற்க வந்த அனைத்து மாணவர்களையும் வரவேற்கும் விதமாக கை தட்டி வாழ்த்து கூறி வகுப்பறைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் குமரவேல், பரங்கிப்பேட்டை வட்டார கல்வி அலுவலர்கள் ராஜசேகர், கந்தசாமி, பேரூராட்சி மன்ற தலைவர் மல்லிகா, பள்ளியின் கல்விக் குழுத் தலைவர் சூர்யா, கிராம தலைவர் செஞ்சி சின்னமணி, சத்தியமூர்த்தி, செல்லதுரை, கோதண்டபாணி மற்றும் பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.