Skip to main content

மாவட்டங்களில் வேகமாக பரவும் கரோனா... முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரம்!

Published on 19/07/2020 | Edited on 19/07/2020
k

 

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை  ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

 

உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து காணப்படுகின்றது. மராட்டியத்திற்கு அடுத்ததாக தமிழகத்தில் கரோனா தொற்று அதிக அளவு இருந்து வருகின்றது. இதுவரை தமிழகத்தில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 714 ஆக உள்ளது.

 

குறிப்பாக தென் தமிழகத்தில் கரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகின்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிதாத 146 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1960 ஆக அதிகரித்துள்ளது. அதை போலவே வேலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும், மதுரை, விருதுநகர் உள்ளிட்ட தென் தமிழக மாவட்டங்களிலும் கரோனா வேகமாக பரவி வருகின்றது. இதனை தடுக்க அந்தெந்த மாவட்ட நிர்வாகம் துரித கதியில் வேலை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்