Skip to main content

தமிழகத்தில் முதல்முறையாக இன்று ஒரேநாளில் 9,344 பேருக்கு கரோனா உறுதி!

Published on 17/04/2021 | Edited on 17/04/2021

 

kl;


தமிழகத்தில் இன்று (17.04.2021) 9,344 பேருக்கு ஒரேநாளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரேநாளில் 2,884 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து 2000க்கும் அதிகமான கரோனா தொற்று பதிவாகி வருகிறது. பிற மாவட்டங்களிலும் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்றைய பாதிப்புகளையும் சேர்த்து தமிழகம் முழுவதும் இதுவரை 9,80,384 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமானவர்களின் எண்ணிக்கை 5,263 ஆக உள்ளது. இதன் மூலம் இதுவரை குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 9,02,022 ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக உள்ளது. இதன் மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 13,071 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 1,00,804 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. மொத்தமாக தமிழ்நாட்டில் இதுவரை 2,10,76,696 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்