Skip to main content

நாளை திறக்க இருக்கும் கரோனா மருத்துவ மையம்! (படங்கள்)

Published on 28/05/2021 | Edited on 28/05/2021

 

தமிழகத்தில் கரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளதால் மக்கள் கடும் அவதிகளை சந்தித்துவருகின்றனர். இந்நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் முதலில் தம்மை தனிமைப்படுத்திகொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். அதனால் தமிழகத்தின் பல இடங்களிலும் கரோனா மருத்துவ முகாமை திறந்துவருகின்றனர்.

 

அதேபோல், சென்னை அண்ணாநகர் காந்தி நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்சிஜனுடன் கூடிய 100 படுக்கைகள் கரோனா சிகிச்சைக்காக தயார் நிலையில் உள்ளன. இதனை நாளை (29.05.2021), அமைச்சர் சேகர்பாபு, தயாநிதி மாறன் எம்.பி. ஆகியோர் திறக்கவுள்ளதாக மருத்துவமனை வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தயாநிதி மாறனை ஆதரித்து மு.க.தமிழரசு வாக்கு சேகரிப்பு (படங்கள்)

Published on 03/04/2024 | Edited on 03/04/2024

 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தை பொருத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

அந்த வகையில், நேற்று (02-04-24) மத்திய சென்னை மக்களவைத் தொகுதி தி.மு.க வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து மு.க. தமிழரசு தி.நகர் பகுதி வாக்காளர்களிடம் தீவிரமாக வாக்கு சேகரித்தார். 

 

படங்கள் - எஸ்.பி.சுந்தர்

Next Story

மகளுடன் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் தீவிர பிரச்சாரம் (படங்கள்)

Published on 02/04/2024 | Edited on 02/04/2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் திமுக சார்பில் மத்திய சென்னையில் போட்டியிடும் தயாநிதி மாறன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், 'கண்டிப்பாக வர இருக்கும் தேர்தலில் கடந்த தேர்தலை விட அதிகமான வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றிபெற செய்வீர்கள் என்று நம்புகிறேன். முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம். பத்து ஆண்டுகளாக நரேந்திர மோடி இந்தியாவை ஆண்டார். குறிப்பாக 2021-க்கு முன்பு இங்கிருந்த அடிமை ஆட்சியை வைத்து தமிழகத்திற்கு ஒரு நல்ல காரியத்தையும் செய்யவிடாமல் நம்மை ஏமாற்றி இருக்கிறார்கள்” என்றார். பிரச்சாரத்தின் போது அவரது மகளும் உடனிருந்தார்.

படங்கள் : எஸ்.பி.சுந்தர்