Skip to main content

தமிழகத்தில் 4 லட்சத்தை நெருங்கும் கரோனா! 7 ஆயிரத்தை நெருங்கும் உயிரிழப்பு!

Published on 26/08/2020 | Edited on 26/08/2020

 

 Corona approaching 4 lakhs in Tamil Nadu

 

தமிழகத்தில் இன்று மேலும் 5,958 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று கரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 5,943 பேர் தமிழ்நாட்டையும், மற்றவர்கள் பிற மாநில மற்றும் நாடுகளிலிருந்து வந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,917,261 ஆக உயர்ந்து 4 லட்சத்தை நெருங்கியுள்ளது. அதேபோல், 52,362  பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,290 ஆகப் பதிவாகியுள்ளது. கடந்த ஜூன் 3 -ஆம் தேதி சென்னையில் 1,012 என்ற எண்ணிக்கையில் கரோனா பாதிப்பு பதிவாகியிருந்தது. சென்னையில் மட்டும் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1,29,247 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் ஒரே நாளில் 73,631 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 5,606 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,38,060 ஆக அதிகரித்துள்ளது. எனவே, கரோனாவிற்கு சிகிச்சை பெறுவோர்களைவிட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி 118 பேர் இறந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 21 நாட்களாக 100-ஐ கடந்திருந்த கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை கடந்த 3 நாட்களாக 100 -க்கும் கீழ் குறைந்தது. இந்நிலையில் தற்பொழுது மீண்டும் 2 -ஆவது நாளாக உயிரிழப்பு 100-ஐ தொட்டுள்ளது.  இதனால் தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 6,839 ஆக அதிகரித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்