Published on 17/05/2021 | Edited on 17/05/2021

தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை உள்ளிட்ட பணிகளில் அரசுக்கு உதவும் வகையில், தொழில் அதிபர்கள், நடிகர்கள், திரைப்பட இயக்குநர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி அளித்து வருகின்றனர். மேலும், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இணையதளம் மூலம் அரசுக்கு நிதி அளித்து வருகின்றனர். அந்த வகையில், இன்று சென்னை தலைமைச் செயலகத்துக்குச் சென்ற நடிகரும் குமரி எம்பியுமான விஜய் வசந்த், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து கரோனா பொது நிவாரண நிதியாக ரூபாய் 25 லட்சம் நிதியை வழங்கினார்.