Skip to main content

திருடிய வண்டியுடன் வந்து பேருந்து நடத்துநரிடம் கொள்ளையடித்த கல்லூரி மாணவர்கள்! 

Published on 08/06/2022 | Edited on 08/06/2022

 

College students who came with a stolen car and robbed the bus driver!

 

வேலூரில் இருந்து விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வரை தனியார் பேருந்து ஒன்று இயக்கப்படுகிறது. இந்த பேருந்தை இரவு நேரத்தில் மேல்மலையனூரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகில் நிறுத்தி விட்டு அந்த பேருந்தின் நடத்துநர் மற்றும் ஓட்டுநர் இருவரும் இரவு ஓய்வெடுப்பது வழக்கம். இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு அந்த பெட்ரோல் பங்கில் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட வந்தவர்கள், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்தில் ஏறியுள்ளனர். 


இரவு நேரம் என்பதால், பேருந்தில் நடத்துநர் மற்றும் ஓட்டுநர் இருவரும் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது பேருந்து ஓட்டுநர் வைத்திருந்த ரூ. 8000 பணத்தை பறித்துச் சென்றுள்ளனர். பேருந்து ஓட்டுநர், திருடர்களை பிடிக்க துரத்திக் கொண்டு சென்றுள்ளார். அவரை தாக்கி விட்டு கொள்ளையர்கள் தப்பி ஓடியுள்ளனர். அவர்கள் ஓடும்போது கொள்ளையர்கள் வைத்திருந்த செல்போன் கீழே தவறி விழுந்துள்ளது. அதை கவனிக்காமல் தப்பிச் சென்றுவிட்டனர். சிறிது நேரத்தில் தங்கள் செல்போன் தவறி விழுந்தது தெரிந்து கொண்ட கொள்ளையர்கள் மீண்டும் செல்போனை எடுப்பதற்காக பெட்ரோல் பங்குக்கு வந்துள்ளனர். 


அதற்குள் அங்கு பரபரப்பாகி ஓட்டுநர், நடத்துநர், பெட்ரோல் பங்கு ஊழியர்கள் அனைவரும் ஒன்று கூடியுள்ளனர். அந்த சமயம், அவர்கள் செல் போன் எடுக்க அங்கு வர, தன்னிடம் பறித்த பணத்தை திரும்பித் தருமாறு ஓட்டுநர் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கொள்ளையர்கள் இருவரும், பெட்ரோல் பங்கு ஊழியர்களையும்  பேருந்து ஓட்டுநர், நடத்துநர் ஆகியோரை தாக்க முற்பட்டனர். அப்போது அங்கு மக்கள் கூட்டம் கூடியது. கூட்டத்தை கண்டதும் கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர். 

 

இச்சம்பவம் குறித்து பேருந்து ஓட்டுநர் ராஜா, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பெட்ரோல் பங்கில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் மேல்மலையனூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும், அதில் ஒருவர் அரசு கல்லூரியில் படிக்கும் மாணவன், மற்றொருவர் 16 வயது பாலிடெக்னிக் மாணவன் என்பதும் தெரியவந்தது. 


இருவரும் குடிபோதையில் மேல்மலையனூர் அப்பகுதியில் நின்றிருந்த ஒரு இருசக்கர வாகனத்தை திருடிக்கொண்டு வரும்போது பெட்ரோல் பங்க் அருகில் நின்றிருந்த பேருந்தில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த ஓட்டுநரிடம் பணத்தை திருடியது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

சிறுமியைத் திருமணம் செய்து குடும்பம் நடத்திய இளைஞர்!

Published on 04/07/2024 | Edited on 04/07/2024
young man who married the girl

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே நல்லகவுண்டன் பாளையத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் என்கிற முகமது ஆதம். இவர் சிறுமியை திருமணம் செய்ததாக கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூக நலத்துறை ஊர் நல அலுவலராக பணிபுரியும் கிருஷ்ணவேணி என்பவர் புகார் கொடுத்தார்.

அந்தப் புகாரின் பேரில் கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர். இதில் முகமது ஆதம் 17 வயது  சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தியது உறுதி செய்யப்பட்டது. மேலும் அந்தச் சிறுமி தற்போது 6 மாத கர்ப்பமாக இருப்பதும் தெரிய வந்தது. இதனை அடுத்து கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் போலீசார் முகமது ஆதம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

கஞ்சா போதையில் இளைஞர்கள் அட்டகாசம்; தீயாகப் பரவிவரும் வீடியோ!

Published on 04/07/2024 | Edited on 04/07/2024
 youths are intoxicated with cannabis in Palani

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி மலை அடிவாரத்தில் உள்ள சிறுவர் பூங்காவில் சில இளைஞர்கள் போதையில் மிதப்பது போல் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். அதில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள கஞ்சாவை பயன்படுத்தி அதன் மூலம் போதை ஏறி பூங்காவில் விழுந்து கிடப்பது போல  வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளனர்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை பயன்படுத்துவது மற்றும் பொது இடத்தில் விழுந்து கிடப்பது போன்று வீடியோ பதிவிட்ட இளைஞர் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக வலைத்தளங்களில் இணையவாசிகள் கருத்து தெரிவித்து வந்தனர்.  அதைத் தொடர்ந்து பழனி நகர டிஎஸ்பி தனஞ்ஜெயன் உத்தரவின் பேரில் போலீசார் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட இளைஞர்களைத் தேடி வருகின்றனர். ஏற்கெனவே பழனி  நகரில் உள்ள அடிவாரம், பஸ் ஸ்டாண்டு, ரயில்வே ஸ்டேசன் உள்பட சில இடங்களிலும் அதுபோல் பழனியைச் சுற்றியுள்ள பாலசமுத்திரம், ஆயக்குடி, நெய்க்காரபட்டி உள்பட சில இடங்களிலும் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிகிறது.  

 youths are intoxicated with cannabis in Palani

இது சம்மந்தமாக பழனி டிஎஸ்பி தனஞ்ஜெயனிடம் கேட்டபோது, “அந்த  வீடியோ குறித்து விசாரணை செய்து, அந்த இளைஞர்களைத் தேடி வருகிறோம். கூடிய விரைவில் கைது செய்வோம். இப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த மூன்று பேரை ஏற்கனவே கைது செய்து இருக்கிறேன். மேலும் கஞ்சா புழக்கம் இருப்பதாக தகவலும் வந்திருப்பதால் தொடர்ந்து அதிரடி நடவடிக்கை எடுத்து  சமூக விரோத செயலில் ஈடுபடும் அந்தக் கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இருப்பினும், பழனியில் இதுபோன்ற வீடியோ எடுத்து இளைஞர்கள் இணையத்தளங்களில் பதிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழனி, கொடைக்கானலில் பெண்களை வைத்து பணம் பறிக்கும் கும்பலை கையும் களவுமாக பிடிக்க எஸ்பி பிரதீப் அதிரடி நடவடிக்கை  எடுத்திருந்தார். அதுபோல் தற்போது பழனி மட்டுமல்ல திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள  பல பகுதிகளில் கஞ்சா புழக்கம் அதிகமாகவே இருந்து வருகிறது. இது சம்மந்தமாக பழனி சட்டமன்ற உறுப்பினரும், கிழக்கு மாவட்டச் செயலாளருமான ஐ.பி.செந்தில்குமாரும் மாவட்ட எஸ்.பி.பிரதீப்பிடம் தொடர்பு கொண்டு பழனி உட்பட சில இடங்களில் கஞ்சா  விற்கப்படுவதாக தகவல் வருவதால் அதை ஒடுக்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.