Skip to main content

மாதவரத்தில் கல்லூரி மாணவர்கள் கத்தி, அரிவாளுடன் மோதல்... 12 மாணவர்கள் கைது!!

Published on 11/03/2020 | Edited on 11/03/2020

சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கிடையேயான மோதல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்பொழுது சென்னை மாதவரம் பேருந்து நிலையத்தில் இரு கல்லூரி மாணவர்கள் கத்தி அரிவாளுடன் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 College students clash in bus stand...

 

சென்னை மாதவரம் பேருந்து நிலையத்தில் பச்சையப்பன், அம்பேத்கர் கல்லூரி மாணவர்கள் கத்தி அரிவாளுடன் மோதிக் கொண்டனர். இரண்டு கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடந்த இந்த மோதலில் ஒரு மாணவனுக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டுள்ளது. மோதல் தொடர்பாக 12 மாணவர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மோதல் சம்பவத்தில் 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்