சின்னசேலத்தில் டிராக்டர் மீது ரயில் மோதிய விபத்து:
300 பேர் உயிர் தப்பினர்

கண்ணிமைக்கும் நேரத்தில், பின்னால் இருந்த டிப்பர் மீது ரயில் இன்ஜின் அதிவேகமாக மோதியது. இதில் டிப்பர் கொக்கி கழன்று, பள்ளத்தில் ஓடி விழுந்தது. ரயில் இன்ஜினின் முன்பாகம் முற்றிலும் சேதமடைந்து, சுமார் 100மீட்டர் சென்று நின்றது. டிராக்டர் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதுடன், தலைமறைவானார்.
விபத்தில் சிக்கிய ரயிலை மேற்கொண்டு இயக்க முடியவில்லை. இந்தநிலையில் விருத்தாசலத்தில் இருந்து சேலம் சென்ற ரயிலை சின்னசேலம் ரயில் நிலையத்தில் நிறுத்திவிட்டு, அதிலிருந்த இன்ஜினை பொன்பரப்பிக்கு எடுத்து சென்று, விபத்தில் சிக்கிய ரயிலை சின்னசேலம் ரயில் நிலையத்திற்கு இழுத்து வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சின்னசேலம் தாசில்தார் வெங்கடேசன் மற்றும் சின்னசேலம் போலீசார் வந்து, பயணிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர். அதிர்ஷ்டவசமாக டிரைவர் மற்றும் 300 பயணிகள் உயிர் தப்பினர்.