Skip to main content

ஆதரவு தருவதாகக் கூறி கட்டைப் பையில் குழந்தையைக் கடத்திய பெண்... தஞ்சையில் பரபரப்பு!

Published on 08/10/2021 | Edited on 08/10/2021

 

child incident excitement in Tanjore!

 

காதல் திருமணம் செய்து கொண்டதால் இருவீட்டார் ஆதரவும் இல்லாத கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஆதரவாக இருப்பதுபோல நடித்து மருத்துவமனையிலிருந்து குழந்தையைக் கடத்திய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

 

தஞ்சாவூர் ராசா மிராசுதார் மகப்பேறு மருத்துவமனை. தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, அரியலூர் மாவட்டங்களில் சிக்கலான கர்ப்பிணிப் பெண்களையும், பிரசவம் நடந்த பிறகு சிக்கலாகும் தாய் மற்றும் குழந்தைகளையும் தஞ்சை ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு கொண்டு போனால் காப்பாற்றிவிடலாம் என்ற நம்பிக்கை பொதுமக்களிடம் இன்றளவும் உள்ளது. அங்குதான் அடிக்கடி குழந்தை திருட்டுகளும் நடப்பது வேதனையளிக்கிறது.

 

தஞ்சை பர்மா காலனி பகுதியை சேர்ந்த டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி குணசேகரன் (வயது 24). ராஜலட்சுமி (22) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனால் இரு வீட்டார் ஆதரவும் இல்லாமல் இருந்துள்ளனர். ராஜலட்சுமி கர்ப்பமானது முதல் அரசு மருத்துவமனையில் பரிசோதனைகள் செய்து கொண்டார்.

 

child incident excitement in Tanjore!

 

கடந்த 4 நாட்களுக்கு முன்பு ராஜலட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் கணவர் குணசேகரன் அவரது மனைவியை தஞ்சை ராசாமிராசுதார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

 

ராஜலட்சுமி தனியாக இருப்பதைப் பார்த்த ஒரு பெண், ''உனக்காக யாரும் வரலையா? நான் உங்க அம்மாபோல இருந்து பார்த்துக்கிறேன்'' என்று கூறி 4 நாட்களாக கூடவே இருந்தவர். வெள்ளிக்கிழமை நான் குழந்தையை பார்த்துக் கொள்கிறேன். நீ குளித்துவிட்டு வா என்று ராஜலட்சுமியை குளிக்க செல்லுமாறு அனுப்பியுள்ளார். ராஜலெட்சுமியும் அவர் பேச்சை நம்பி குளித்துவிட்டு வந்து பார்த்தபோது அவரது பெண் குழந்தையை காணவில்லை. கதறி அழுதுகொண்டே கணவருக்கு தகவல் சொல்ல மருத்துவமனை எங்கும் தேடியும் கிடைக்கவில்லை.

 

child incident excitement in Tanjore!

 

அதன் பிறகு மருத்துவமனை சிசிடிவி கேமராக்களில் பார்த்தபோது ராஜலட்சுமிக்கு ஆதரவாக இருந்த பெண் குழந்தையை பச்சைநிற கட்டைப் பையில் வைத்துக் கொண்டு வெளியேறுவது தெரிந்தது.

 

இது குறித்து டி.எஸ்.பி கபிலன் தலைமையில் தஞ்சை மேற்கு காவல் நிலைய போலீசார் குழந்தையை திருடிய பெண்ணை தேடி வருகின்றனர். சில வருடங்களாக கூடுதல் பாதுகாப்பு, சிசிடிவி பாதுகாப்பு வைக்கப்பட்டிருப்பதால் குழந்தை கடத்தல் குறைந்திருந்த நிலையில், மீண்டும் குழந்தை திருட்டு நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரிப்பு; போலீசார் விசாரணை

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
In broad daylight, someone poured petrol and set it on fire; Police investigation

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டப்பகலில் சித்தப்பா மீது மகனே பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்து உள்ள சவரக்கோட்டை பிரிவு பகுதியில் வசித்து வருபவர் வடமலை. அவருடைய மகன்கள் சின்னவன் மற்றும் மணி. மணியின் மகன் செந்தில். கடந்த நான்கு நாட்களுக்கு முன்னதாக செந்தில் அவருடைய விவசாய நிலத்தில் அறுவடை பணிக்காக டிராக்டரில் சென்றுள்ளார். அப்பொழுது சித்தப்பா சின்னவன் மற்றும் செந்தில் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இது தொடர் பிரச்சனையாக இருந்து வந்த நிலையில் இருதரப்பினரும் காவேரிப்பட்டினம் போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சித்தப்பா சின்னவன் தீவனக்கடை ஒன்றில் இருந்த பொழுது கடைக்குச் சென்ற செந்தில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி பற்ற வைத்தார்.

இதில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த சின்னவனை அங்கிருந்தவர்கள் நேற்று தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பட்டப்பகலில் ஒருவர் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Next Story

'உங்கள் குழந்தை செர்லாக் பேபியா?' -எச்சரிக்கை மணி அடித்த உலக சுகாதார அமைப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Is your child a Cerelac baby?'-World Health Organization has sounded the alarm

நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான செர்லாக் என்பது ஊட்டச்சத்து உணவு எனப் பொதுவாக குழந்தைகளுக்கு கொடுக்கும் பழக்கம் இந்தியாவில் நீண்ட நெடும் காலமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 'நெஸ்லே' நிறுவனம் இந்தியாவில் பல்லாயிரம் கோடிக்கு வர்த்தகம் செய்து வருகின்ற நிலையில், நெஸ்லேவின் குறிப்பிடத் தகுந்தத் தயாரிப்பில் ஒன்றாக உள்ளது செர்லாக்.

இந்தநிலையில் IBFAN எனப்படும் Baby Food Action Network என்ற ஐரோப்பிய அமைப்பு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் விற்கப்படும் செர்லாக் எனும் குழந்தைகளுக்கான  ஊட்டச்சத்து உணவை ஆய்வு செய்தது. ஊட்டச்சத்து பொருள் என்று கூறப்படும் செர்லாக்கில் சுவைக்கு அடிமையாக்கி அடிக்கடி உண்ண வைக்கும் அடிக்டிவ் சுகர் என்பது சேர்க்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் மிகவும் குறிப்பிடத்தகுந்தது நெஸ்லேவின் முக்கிய சந்தையாக கருதப்படும் பிரிட்டன், ஜெர்மனி போன்ற நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில்  அடிக்டிவ் சுகர் சேர்க்கப்படவில்லை. ஆனால் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில் மட்டும் அடிக்டிவ் சுகர் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனையாகும் செர்லாக்கை  குழந்தைக்கு ஒரு முறை ஊட்டுகையில் 2.2 சதவீதம் அடிக்டிவ் சுகர் குழந்தையின் உடலுக்கு செல்கிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால் இந்தியாவை விட எத்தியோப்பியா போன்ற நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில்  அடிக்டிவ் சுகரின் அளவு 5.2 கிராமாக உள்ளது. நெஸ்லேவின் இந்தச் செயல்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இளம் வயதிலேயே சர்க்கரை நோய் வருவதற்கும், குழந்தைகள் பார்ப்பதற்கு அளவுக்கு மீறி குண்டாக இருப்பதற்கும் இவையே காரணம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.