Skip to main content

திருமாவளவன் எம்.பி மீது காவல்துறை வழக்குப்பதிவு!

Published on 20/11/2019 | Edited on 20/11/2019

விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவரும், சிதம்பரம் மக்களவை தொகுதி உறுப்பினருமான தொல். திருமாவளவன் மீது காவல்துறை வழக்குப்பதிவு. 


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் இயக்கம் சார்பில் சனாதன கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநாடு அண்மையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், உச்ச நீதிமன்றத்தின் அயோத்தி தீர்ப்பு குறித்து விமர்சித்துப் பேசினார். அதில், பாபர் மசூதி இருந்த இடத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் அதற்கு கீழே ஒரு கட்டமைப்பு இருந்ததை குறிப்பிட்டுள்ளனர். அகழ்வாராய்ச்சியில் அது இந்து கோயில், மசூதி, தேவாலயம் என்று அறிய முடியாது. ஆனால், அந்த கட்டமைப்பை வைத்து அறியலாம். குவி மாடமாக இருந்தால் மசூதி என்றும் கூம்பு போல இருந்தால் கிறிஸ்தவ தேவாலயம் என்றும் அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது இந்து கட்டடம் என்று தொல்.திருமாவளவன் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.   

chidambaram constituency lok sabha member thirumavalavan perambalur police fir filed


இந்நிலையில் கோயில் சிலைகள் குறித்து சர்ச்சையாக பேசியதாக திருமாவளவன் மீது பெரம்பலூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்து முன்னணி நகர செயலாளர் கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  


 

சார்ந்த செய்திகள்