Skip to main content

கடும் மன உளைச்சல்களுக்கு ஆளாகியுள்ள சென்னை போலீசார்!

Published on 12/03/2019 | Edited on 12/03/2019

 

சென்னை கிழக்கு மண்டல காவல் துறை இணை ஆணையர் ஜெயகவுரியின் நடவடிக்கைகளால் கடும் மன உளைச்சல்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள் சென்னை காவல் துறையினர். 
 

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நன்னடத்தை விதிகள் அமலானதால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அமைச்சர்கள் அனைவரும் அரசு வாகனங்களை பயண்படுத்த தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. மேலும், அரசு சலுகைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், எடப்பாடி பழனிச்சாமி தனது வீட்டிலிருந்து வெளியே எங்கு கிளம்பிச்சென்றாலும் அவர் செல்லும் வழிகளில் பாதுகாப்பிற்காக காவல்துறையினரை நிற்க வைக்கும் அவலம் தொடர்கிறது. 

 

police


நேற்று (11.3.2019) கிரின்வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டிலிருந்து ராயப்பேட்டையிலுள்ள அதிமுக கட்சி அலுவலகத்துக்கு சென்று வந்தார் எடப்பாடி பழனிச்சாமி. காலை 11 மணிக்கு எடப்பாடி புறப்படும் நிலையில், காலை 7 மணிக்கே 300 -க்கும் மேற்பட்ட காவலர்களை பாதுகாப்புக்காக வழி நெடுகிலும் நிறுத்தி வைத்துள்ளார் ஜெயகவுரி. 
 

காலையிலேயே டூட்டிக்கு வந்ததால் பணிகளுக்கிடையே சாப்பிட்டுக்கொள்ளலாம் என நினைத்து வந்துள்ளனர். ஆனால், அவர்களை சாப்பிடச் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால், சாலையில் நின்றுகொண்டே பலரும் சாப்பிட்டிருக்கிறார்கள். முற்பகல் 11 மணிக்கு எடப்பாடி கிளம்பி சென்றபோதும், பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களை ரிலாக்ஸ் செய்து கொள்ள அனுமதிக்கவில்லை ஜெயகவுரி. அட்டென்ஷன் பொசிசனில் நிற்க வேண்டும் என கடுமையாக உத்தரவிட்டிருக்கிறார். 
 

அதே போல, 2 மணிக்கு மேலே வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார் எடப்பாடி. அதன்பிறகாவது  மதியம் சாப்பாட்டுக்கு அனுமதிப்பார் என எதிர்பார்த்தனர் காவலர்கள். அனுமதிகிடைக்கவில்லை. காலையில் போலவே 3 மணிக்கு மேலே மதிய சாப்பாட்டையும் சாலையில் நின்று கொண்டே சாப்பிட்டிருக்கிறார்கள். சரி, எடப்பாடி தான் வீட்டிற்கு திரும்பிவிட்டாரே , இனி கான்வாயை கேன்சல் செய்துவிடுவார் என காவலர்கள் எதிர்பார்த்தனர். 


ஆனால், ஜெய கவுரியோ, " மாலையில்  முதல்வர் மீண்டும் வெளியே கிளம்புகிறார். அதனால் பாதுகாப்பு அப்படியே இருக்கட்டும் " என அவர் உத்தரவிட்டதால் நொந்து போனார்கள் காவலர்கள். மேலும், இயற்கை உபாதைகளுக்கும் அவர்களை அனுமதிக்கவில்லை. இதில் பெண்காவலர்களின் துயரங்கள் ஜீரணிக்க முடியவில்லை. மாலையில் கிளம்பி வெளியே சென்ற எடப்பாடி இரவு வெகுநேரம் கழித்துத்தான் வீடு திரும்பியுள்ளார். அதுவரை பாதுகாப்பு பணியில் நின்றபடியே இருந்தனர். 
 

இதனால் ஏகத்துக்கும் நொந்து போனார்கள் காவலர்கள். நேற்றைய தினம் போலவே, இன்றும் அதேபோல கெடுபிடி காட்டியுள்ளார் ஜெயகவுரி. மேலும், எடப்பாடி செல்லும் பாதையில் வீடுகள் திறந்திருக்கக்கூடாது, சாலையில் நின்றுகொண்டு ஃபோன் பேசக்கூடாது, வீட்டு ஜன்னல்கள் அடைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றெல்லாம் கடுமையாக கெடுபிடிகாட்டி வருகிறார் ஜெயகவுரி. முதல்வருக்கு பாதுகாப்புங்கிற பேரில் ஜெயகவுரி தரும்  கெடுபிடிகளால் மன உளைச்சல்களில் தவித்து வருகின்றனர் காவலர்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெறுப்பு பிரச்சாரம்; மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போராட்டம் (படங்கள்)

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, வெறுப்பு பிரச்சாரம் செய்துவரும்  பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும், வழக்கு பதிவு செய்திடவும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் மத்திய சென்னை மாவட்டம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை கண்டனம் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. பிறகு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க, பேரணியாக சென்றனர்.

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.