Skip to main content

செல்போன் வெடித்ததில் மாணவன் பலி

Published on 05/10/2017 | Edited on 05/10/2017
செல்போன் வெடித்ததில் மாணவன் பலி

சென்னை செங்குன்றம் அடுத்த நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட சமத்துவபுரம், நாகாத்தம்மன் நகர், கருணாநிதி தெருவை சேர்ந்தவர் சித்திரைவேலு. இவரது மகன் ரஞ்சித் (21). திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு பிஇ படித்து வந்தார். நேற்று முன் தினம் இரவு தனது செல்போனுக்கு சார்ஜர் போட்டுவிட்டு அருகில் படுத்திருந்தார். நள்ளிரவு 1.30 மணியளவில் அப்பகுதியில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் சார்ஜர் வெடித்து செல்போன் தீப்பிடித்து எரிந்தது. அருகில் படுத்திருந்த ரஞ்சித் மீதும் தீ பரவியது.

இதில் பலத்த தீக்காயம் அடைந்த ரஞ்சித் வலியால் துடித்தார். அவரது சத்தம் கேட்டு எழுந்த பெற்றோர், மகன் நிலைமையை பார்த்து கதறி அழுதனர். உடனடியாக மொண்டியம்மன் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு ரஞ்சித்தை பரிசோதித்த டாக்டர்கள், வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்ததும் சோழவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரஞ்சித்தின் சடலத்தை கைப்பற்றி, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றிய புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்