Skip to main content

காவிரி பிரச்னையை பொறுத்தவரை நதிகள் இணைப்புதான் நிரந்தர தீர்வாக அமையும் : விஜயகாந்த்

Published on 17/02/2018 | Edited on 17/02/2018
vijayakanth

 

காவிரி நீர் பங்கீடு சம்மந்தமான உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கை:’’இன்று உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு  14.75 டி.எம்.சி தண்ணீர்  தமிழகத்திற்கு குறைவாக கிடைக்கக்கூடிய வகையில் வழங்கப்பட்ட  தீர்ப்பாகும், இந்த தீர்ப்பு தமிழக மக்களால் ஏற்றுகொள்ள முடியாத தீர்ப்பாகும், ஆனாலும் தண்ணீர் என்பது எந்த  மாநிலத்திற்கும் நிரந்தர  சொந்தம் இல்லை என்ற உச்சநீதிமன்றத்தின்  தீர்ப்பு  உண்மையிலே வரவேற்கத்தக்கது.


  
காவிரி பிரச்சினையை  வைத்து இருமாநிலங்களில் ஓட்டுக்காக அரசியல் செய்யக்கூடாது, ஏனென்றால் காவிரி தண்ணீர் பிரச்சினை இரு மாநிலங்களுக்கிடையே உள்ள  மக்கள்  பிரச்சனையாக மாறக்கூடாது , அதேபோல ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலம் வரும்போதெல்லாம்  இந்த பிரச்சனை பல ஆண்டுகாலமாக பேசப்பட்டு வருகிறது , ஆனாலும் இந்த பிரச்சனைக்கு எந்த ஒரு நிரந்தர தீர்வும் கிடைக்கவில்லை.

 

இந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு நதிகளை இணைப்பதுதான் , எப்படி தேசிய நெடுஞ்சாலைகள்  என்பது எல்லா மாநிலங்களுக்கும் சமமாக இணைப்பு  சாலைகளாக இருக்கிறதோ ,அதேபோல அனைத்து  நதிகளையும் எல்லா மாநிலங்களுக்கும் சமமாக இணைக்கவேண்டும்,அப்போதுதான் இந்தியா முழுவதும் எங்கும் வறட்சி இல்லாமலும்  வெள்ள பாதிப்புகள் ஏற்படாமலும் தடுத்து சமநிலையாக  அனைத்து  மாநிலங்களுக்கும் தண்ணீர் கொண்டு செல்ல முடியும் .

 

தமிழ்நாட்டை  பொறுத்தவரை சென்ற ஆண்டு  டிசம்பர் மாதம் சென்னையில் பெய்த மழையில் 3.75 டி.எம்.சி தண்ணீரும் தமிழகம் முழுவதும்  88 டி.எம்.சி தண்ணீரூம் வீணாக கடலில் கலந்திருப்பதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது,  இந்த தண்ணீரை சேமிப்பதற்கு  கடந்த ஆண்டு தமிழக  அரசு நீர்நிலைகளை சீர்செய்வதற்கு பல கோடி நிதியை ஒதுக்கியது,ஆனால் அந்த நிதியை கொண்டு  குளம்,குட்டை,ஏரி,வாய்க்கால்களை தரமான முறையில் சரி வர தூர்வாறாததால் மழையின் மூலம் கிடைக்கும் நீர் சரியாக சேமிக்க முடியாமல் வருடம்தோறும்  தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது.

 

ஆகவே  நமக்கு கிடைக்கும் மழைநீரை சரியாக  சேமித்து வைத்திருந்தாலே அண்டை மாநிலங்களிடம் கேட்க வேண்டிய அவசியம் இருக்காது.

 

மத்திய அரசு, மாநிலங்களுக்கிடையே வஞ்சனையை பார்க்காமல்  நடுநிலையோடு அனைத்து மாநிலங்களையும் சரிசமமாக பார்க்கவேண்டும், காவிரி பிரச்னையை  பொறுத்தவரை  நதிகள் இணைப்புதான் நிரந்தர தீர்வாக அமையும் என்பதில் தேமுதிக உறுதியாக உள்ளது.’’


 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசியல் வருகை குறித்த கேள்விக்கு சண்முகப்பாண்டியன் பதில்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
shanmuga pandian press meet

விஜயகாந்தின் இரண்டாவது மகனான சண்முகப் பாண்டியன் சகாப்தம், மதுர வீரன் ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது படைத் தலைவன் படத்தில் நடித்து வருகிறார். டைரக்டர்ஸ் சினிமாஸ் தயாரிப்பில், உருவாகும் இப்படம் காட்டு யானைகளின் வாழ்வியலை மையப்படுத்தி ஆக்‌ஷன் ஜானரில் உருவாகிறது. யு. அன்பு இயக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். மேலும் ராகவா லாரன்ஸ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். 

இந்த நிலையில் இன்று சண்முகப் பாண்டியன் பிறந்தநாள் காண்கிறார். இதையொட்டி பிரேமலதா விஜயகாந்துடன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். இன்று விஜயகாந்த் மறைந்து 100 நாள் நிறைவடைகிறது குறிப்பிடத்தக்கது. விஜயகாந்த இல்லாமல் முதல் பிறந்தநாளைக் காண்கிறார். அஞ்சலி செலுத்திய பின்பு செய்தியாளர்களிடம் பேசினார். 

அப்போது அவரிடம் விஜய பிரபாகரரை போல் அரசியலுக்கு வரும் எண்ணம் உள்ளதா என்ற கேள்வி கேட்கப்பட்ட நிலையில் பதிலளித்த அவர்,  “நான் இப்போதைக்கு சினிமாவில் இருக்கிறேன். அண்ணன் அரசியலில் இருக்கிறார். அப்பாவின் ஒரு துறையை அண்ணன் எடுத்துக் கொண்டார். இன்னொரு துறையை நான் எடுத்துக்கொண்டேன்” என்றார். 

இதனிடையே சண்முகப் பாண்டியனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சிறிய வீடியோ ஒன்றை சர்பிரைஸாக வெளியிட்டுள்ளனர் படைத் தலைவன் படக்குழு. அப்படக்குழுவினரும் சண்முகப் பாண்டியனோடு இணைந்து விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.  

Next Story

விஜயகாந்த் மறைந்து 100ஆவது நாள் - கண்ணீருடன் பிரேமலதா அஞ்சலி

Published on 06/04/2024 | Edited on 06/04/2024

 

நடிகர், தேமுதிக நிறுவனத் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த், கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. அவரது இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். அவரது நினைவிடத்திற்கு இன்றும் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் விஜயகாந்த் மறைந்து இன்றோடு 100 நாள்கள் நிறைவைடைகிறது. இதையொட்டி பிரேமலதா, விஜயகாந்த் நினைவிடத்தில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார். அவருடன் மகன் சண்முகபாண்டியன் உடனிருந்தார். அவருக்கு இன்று பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. 

படங்கள் - எஸ்.பி.சுந்தர்