Skip to main content

3 அரசர்களின் திருக்காட்சி பெருவிழா; ஜல்லிக்கட்டு காளைகளை அவிழ்த்து விட்டவர்கள் மீது வழக்கு

Published on 08/01/2024 | Edited on 08/01/2024
Case filed against 12 people for untying jallikattu bulls in Pudukkottai

குழந்தை இயேசு பிறந்ததும் அவரைக் காண்பதற்காக புனித கஸ்பார், புனித மெல்க்யூர், புனித பல்த்தசார் ஆகிய 3 அரசர்கள் சென்று இயேசுவை பார்த்ததை நினைவூட்டும் வகையில் கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் வீடுகளில் சர்க்கரைப் பொங்கல் வைத்து சிறப்பு செய்யும் திருக்காட்சி பெருவிழா புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களில் பொங்கலிட்டு வழிபட்டனர். இதேபோல ஆவுடையார்கோவில் அருகே உள்ள மூவனூர் தூய அடைக்கல அன்னை ஆலயத்திற்கு கட்டுப்பட்ட பல கிராம மக்களும் ஒவ்வொரு நாட்களில் பொங்கல் வைத்தனர். நேற்று 5 கிராம மக்கள் பொங்கலிட்டனர். பல கிராமங்களில் இருந்தும் பனை ஓலை கூடைகளில் பொங்கல் பானை, பொங்கல் பொருட்களை ஆலயத்திற்கு கொண்டு வந்து வரிசையாக அடுப்பு வைத்து பொங்கல் வைத்த பெண்கள் அனைவரும் பொங்கல் வைத்த பிறகு ஒரே இடத்தில் பொங்கல் கூடைகளை வைத்து சிறப்பு வழிபாடுகள் செய்தனர்.

தொடர்ந்து தங்கள் வீடுகளில் இருந்து ஓட்டிவரப்பட்ட கால்நடைகளுக்கு மாலை அணிவித்து ஜெபம் செய்து ஓட்டிச் சென்றனர். இந்த பொங்கல் விழாவைக் காண மலேசியா நாட்டில் இருந்தும் பலர் குடும்பம் குடும்பமாக வந்திருந்தனர். இதேபோல, கோட்டைக்காட்டில்  உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் ஜல்லிக்கட்டு காளைகளை ஓட்டி வந்து வழிபாடு நடத்தினர். பின்னர், 15க்கும் மேற்பட்ட காளைகளை அவிழ்த்துவிட்டனர். கூட்டத்துக்குள் காளைகள் புகுந்து முட்டியதில் 5க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. தகவலின் பேரில் வடகாடு போலீஸார் சென்று காளைகள் அவிழ்க்கப்படுவதை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல், அனுமதி பெறாமல் ஜல்லிக்கட்டு காளைகளை அவித்துவிட்டதாக 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர் வடகாடு போலீசார்.

சார்ந்த செய்திகள்

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.