Skip to main content

அண்ணாமலை பல்கலை ஊழியர்கள் சம்பளம் கேட்டு உண்ணாவிரத போராட்டம்

Published on 05/10/2017 | Edited on 05/10/2017
அண்ணாமலை பல்கலை ஊழியர்கள் சம்பளம் கேட்டு உண்ணாவிரத போராட்டம்



சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட பல்வேறு குளறுபடி மற்றும் முறைகேடு நடந்ததை உறுதிப்படுத்தி கடந்த நான்கு ஆண்டுளுக்கு முன் தமிழக அரசு பல்கலைக்கழகத்தை முழு கட்டுபாட்டில் எடுத்து நிர்வகித்து வந்தது. 

இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் துணைவேந்தர் நியமிக்கப்பட்டார். துணைவேந்தரை நியமனம் செய்தது முதல் ஊழியர்களுக்கு மாதம் மாதம் சம்பளம் வழங்குவதில் இழுபறியாக இருந்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் ஊழியர்கள் போராட்டம் செய்தே சம்பளம் வாங்கி வந்தனர். ஒவ்வொரு மாதமும் சம்பளம் 10ஆம் தேதிக்கு மேல் தான் வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து அக் மாத சம்பளம் இன்று வரை வழங்கவில்லை. 

இதனை கண்டித்து ஆசிரியர், ஊழியர், ஓய்வுதியர்கள் சங்கத்தினர்  200 க்கும் மேற்பட்டவர்கள்  துணைவேந்தர் மணியன் அலுவலகத்தை செவ்வாய் கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து நிர்வாகம் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் வியாழக்கிழமை காலை முதல் பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து துறை ஊழியர்கள் பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் ஊழியர் சங்க கூட்டமைப்பின் ஒருங்கினைப்பாளர் மனோகரன் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பூமா கோவில் அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். 

வரும் காலங்களில் மாத இறுதி வேலைநாளில் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து பயன்களையும் உடனே வழங்க வேண்டும். இனிமேலும் சம்பளம் வழங்குவதில் கால தாமதம் என்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

காளிதாஸ்

சார்ந்த செய்திகள்