Skip to main content

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கு ஜூலை 7- ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு! 

Published on 04/07/2022 | Edited on 04/07/2022

 

A.D.M.K. Adjournment of the case related to the General Assembly to July 7!

 

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கை வரும் ஜூலை 7- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

கடந்த ஜூன் மாதம் 23- ஆம் தேதி அன்று நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 23 தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், அ.தி.மு.க. கட்சியின் அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டதும், அவரது தலைமையில் கட்சியின் பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் ஜூலை 11- ஆம் தேதி அன்று நடைபெறும் என்று அறிவித்ததும் நீதிமன்ற உத்தரவுக்கு முரணானது, எனவே, அதனை நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையாகக் கருதி அவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று அ.தி.மு.க.வின் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் என்பவர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

 

அந்த மனுவில், அவைத்தலைவராக தமிழ்மகன் உசேனை நியமித்த, எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரைத் தண்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. தமிழ்மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்பட்டது தவறானது; எனவே அவர் அழைப்பு விடுத்துள்ள கட்சியின் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. 

 

இந்த கூடுதல் மனுக்கள் நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் முன்னிலையில் இன்று (04/07/2022) காலை விசாரணைக்கு வந்தது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "அவைத்தலைவர் நியமனத்தை நிரந்தரமாக்க நான் ஒருபோதும் வழிமொழியவில்லை. தற்காலிக அவைத்தலைவரை ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் சேர்ந்தே நியமித்தோம். அவைத்தலைவர் நியமனத்தை ஓ.பன்னீர்செல்வம் ஒப்புக் கொண்டார். நான் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்கு பொதுக்குழு வீடியோ சாட்சி" என்று வாதிட்டனர். 

 

இதையடுத்து, வரும் ஜூலை 11- ஆம் தேதி அன்று பொதுக்குழுவுக்கு தடைகோரி தனி நீதிபதியை தான் அணுக வேண்டும். ஜூன் 23- ஆம் தேதி அன்று நடந்த கூட்டம் தொடர்பாக, மட்டுமே இந்த அமர்வில் விசாரிக்க முடியும். பழைய உத்தரவுகள் அனைத்தும் ஜூன் 23- ஆம் தேதி அன்று பொதுக்குழுவிற்கு மட்டுமே பொருந்தும்" என்று கூறினார்.

 

அதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணையை ஒத்திவைக்க ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கோரியதையடுத்து, வரும் ஜூலை 7- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

  

   

சார்ந்த செய்திகள்

Next Story

பள்ளிகளில் வழங்கப்படும் தண்டனை தொடர்பான வழக்கு; பள்ளிக்கல்வித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court ordered the school education department for Case related to punishment in schools

சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘தமிழ்நாடு முழுவதும் பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனை விதிப்பதை தடை செய்ய வேண்டும் என்ற தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது. 

இது தொடர்பான மனு இன்று (25-04-24) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ‘பள்ளி குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனையைத் தடுக்கும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை பள்ளிக்கல்வித்துறை அமல்படுத்த வேண்டும். ஆணைய விதிகளை அனைத்து பள்ளிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்க வேண்டும். 

விதிகளை மீறி குழந்தைகளுக்குத் தண்டனை வழங்கப்பட்டது தொடர்பாக ஏதேனும் புகார்கள் வந்தால், அதன்பேரில் அதிகாரிகள் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக விதிகளை அமல்படுத்துவதை கண்காணிக்க அனைத்து பள்ளிகளிலும், தலைமை ஆசிரியர், பெற்றோர், ஆசிரியர், மூத்த மாணவர்கள் அடங்கிய கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும்” என்று கூறி பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டது. 

Next Story

“பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Edappadi Palaniswami said Safe travel of passengers should be ensured

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்தப் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்தப் பேருந்தின் நடத்துநரின் இருக்கை கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்தப் பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நேற்று திருச்சி நகரப் பேருந்து சென்று கொண்டிருக்கையில் ஒரு வளைவில் நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வெளியே விழுந்த சம்பவம் தமிழக மக்களிடம், குறிப்பாக அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, ஒரு சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகரப் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் கீழே விழுந்து விபத்துக்குள்ளான நிகழ்வின்போதே இனியாவது அரசு பேருந்துகளை உரிய முறையில் பராமரிப்பு செய்து, அரசு பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த நான் இந்த தி.மு.க அரசை வலியுறுத்தியிருந்தேன். ஆனால், மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்களிடம் அரசு பேருந்து பற்றிய நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளன.

எனவே, இனியாவது இந்தத் திமுக அரசு விழித்துக் கொண்டு, அரசு பேருந்துகளின் ஆயுட்காலத்தை முன்பிருந்தது போல் குறைத்து புதிய பேருந்துகள் வாங்கவும், இயங்கிக் கொண்டிருக்கும் பேருந்துகளை முறையாக பராமரிப்பு செய்து, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யுமாறும் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.