Skip to main content

கரோனா பரவலின் அதிகரிப்பால் 70 பகுதிகள் மூடி வைக்கப்பட்டுள்ளது..!

Published on 12/05/2021 | Edited on 12/05/2021

 

70 areas closed due to increase in corona spread

 

தமிழகத்தில் பரவிவரும் கரோனா நோய் தொற்றால் அரசு மருத்துவமனைகளில் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளும் நிரம்பி வழிய ஆரம்பித்துள்ளன. பல இடங்களில் படுக்கை வசதிகள் இல்லாமல் மருத்துவமனைகளின் வராண்டாகளிலும் காலியாக இடம் இருக்கக் கூடிய எல்லா பகுதிகளையும் நோயாளிகளுக்கான சிகிச்சை தரும் இடமாக மருத்துவமனைகள் மாற்றியுள்ளன. தொடர்ந்து நோய் தாக்கத்தில் இருந்து காப்பாற்ற மருத்துவமனைகள் முயற்சிசெய்து வருகின்றன.

 

இந்நிலையில், திருச்சியில் நாளுக்கு நாள் கரோனா நோய்த் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பலருக்கு மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெறுவதற்கான இடமில்லாததால், அவர்கள் வீடுகளில் இருந்தபடி தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். அப்படி சிகிச்சை பெற்றுவரும் பகுதிகளில், குறிப்பாக திருச்சி நகர் பகுதிகளில் குமரன் நகர், அண்ணாமலை நகர், சீனிவாசன் நகர் உள்ளிட்ட பல பகுதிகளை மாநகராட்சி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து, தகவல்களை வைத்து மூடியுள்ளனர். கடந்த வாரத்தில் 40 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக இருந்த நிலையில், அவை 70 பகுதிகளாக இன்று உயர்ந்திருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.