Skip to main content

தனியார் விடுதியில் 5 வயது சிறுமி கொலை; மாந்திரீக மந்திரவாதியால் விபரீதம்

Published on 06/01/2019 | Edited on 06/01/2019

நாகையில் விடுதி ஒன்றில் 5 வயது சிறுமி தலையணையால் அழுத்தி கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய ஆண் மந்திரவாதி, பெண், ஒரு கைக்குழந்தை உட்பட 3 பேர் விஜயவாடா அருகே ரயில்வே தண்டவாளத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

A 5-year-old girl was killed in a private hotel

 

 

வேளாங்கண்ணியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை ஒன்றில் 5 வயது சிறுமி  கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் சிசிடிவி கேமராவில் பதிவான சிசிடிவி காட்சிகளில் அதிக சிகை வைத்துக் கொண்ட ஆண் ஒருவர் தனது இடுப்பில் ஒரு குழந்தையை வைத்துக்கொண்டு நடந்துவர பின்னே ஒரு பெண் நடந்து வரும் காட்சிகள் பதிவாகியிருந்தது.

 

அதே விடுதியில் அவர்கள் தங்கி இருந்த அறையில் மூன்று நாட்கள் கடந்தபிறகு இவர்கள் தங்கியிருந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியது. இதனையடுத்து அந்த அறை திறக்கப்பட்டது. அறையில் 5 வயது சிறுமி தலையணையால் அழுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். 

 

A 5-year-old girl was killed in a private hotel

 

மாந்திரீக சாமியார் கோபாலகிருஷ்ணன் தங்கும்விடுதியில்  அளித்த ஆதார் அட்டையின் நகலை கொண்டு விடுதியில் கொலை செய்யப்பட்ட சிறுமி நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த கால் டாக்சி ஓட்டுநர் தனசேகரனின் மூத்த மகள் என்பதை போலீசார் கண்டறிந்தனர். எதற்காக இந்த சிறுமி கொல்லப்பட்டார் சாமியாருக்கும் இந்த கொலைக்கும் என்ன சம்பந்தம் போன்றவற்றை துப்பு துலக்க போலீசார் விசாரணையை தொடங்கினர்.

 

ஆனால் இதற்கிடையில் மாந்திரீக சாமியார் கோபாலகிருஷ்ணன், கால்டாக்ஸி ஓட்டுனரின் மனைவி ஜெயந்தி மற்றும் அவர்கள் கையில் வைத்திருந்த மற்றொரு 3 வயது குழந்தை என மூவரும் விஜயவாடாவில் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

murder

 

எதற்காக கொலை செய்தனர். பின்னர் எதற்காக ஆந்திரா சென்றனர் அதன் பின்னர் ஏன் தற்கொலை செய்து கொண்டனர் என்ற மர்மம் புரியாத புதிராகவே போலீசாருக்கு இருந்தது தற்கொலை செய்துகொண்ட 3 பேரின் சடலங்களும் வேலூர் மாவட்டம் நெல்வாய் கிராமத்திற்கு அனுப்பப்பட்டது. 

 

தற்கொலை செய்துகொண்ட  தனது மனைவி ஜெயந்தி வெளியில் கூட அதிகம் செல்ல மாட்டார் அவருக்கு எப்படி வேளாங்கண்ணி வரை செல்ல துணிவு வந்தது என்று எனக்கே தெரியவில்லை. கோபாலகிருஷ்ணனின் வீட்டில் மலையாள மாந்திரீகம் பற்றிய புத்தகங்களும் மாந்திரீகம் செய்வதற்கான பொருட்களும் எப்பொழுதுமே இருக்கும். அவர் பெண்களை வசியம் செய்வது, பேய் ஓட்டுவது, சாமி ஆடுவது என பல மாந்திரீக செயல்களில் ஈடுபடுபவர் எனவே தனது மனைவியை அவர் வசியம் செய்து தான் கூட்டி சென்று இருக்க வேண்டும்  என  தற்கொலை செய்துகொண்ட பெண் ஜெயந்தியின் கணவர் தனசேகரன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

 

murder

 

 

 

murder

 

இந்த சம்பவத்தில் தொடர்புடைய தற்கொலை செய்துகொண்ட சாமியார் கோபாலகிருஷ்ணன் ஜெயந்திக்கு பெரிய மாமனார் முறை.  இதனையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தற்கொலைக்கான காரணம் தெரியவந்துள்ளது. கால் டாக்ஸி ஓட்டுநரான தனசேகரன் இரவு பகல் பாராது வெளியூர்களுக்கு  டாக்ஸி ஓட்டுநர் பணி புரிய செல்வதால் அவரது மனைவிக்கு உதவிகளை செய்ய மாந்திரீக சாமியார் கோபாலகிருஷ்ணன் அடிக்கடி அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் ஜெயந்தியையும் மாந்திரீக சாமியார் கோபாலகிருஷ்ணனுக்கும் இடையே தவறான உறவு இருக்கின்றது என சந்தேகித்தனர். இதனையடுத்து பெரும் மன உளைச்சலுக்கு ஆளான ஜெயந்தியும், மாந்திரீக சாமியார் கோபாலகிருஷ்ணனும் நாகை வேளாங்கண்ணி சென்றுள்ளனர். அங்கு தங்கும் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியிருந்த நிலையில் 5 வயது சிறுமி இடையூறாக இருப்பதாக எண்ணி தலையணையை வைத்து அழுத்தி கொலை செய்தனர். 

 

அதன் பின்பு அங்கிருந்து ஆந்திர மாநிலம் விஜயவாடா சென்ற அவர்கள் சிறுமியை கொலை செய்ததால் எப்படியும் காவல்துறையிடம் மாட்டிக் கொள்வோம் என முடிவு செய்து மன உளைச்சலின் வெளிப்பாடாக ரயிலின் முன் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

 

 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.