Skip to main content

ஏடிஎம் மையத்தில் பணம் கொள்ளையடித்த வழக்கில் மேலும் ஒரு கொள்ளையன் கைது!

Published on 29/06/2021 | Edited on 29/06/2021
jkl


சென்னையில் உள்ள எஸ்பிஐ டெபாசிட் இயந்திரங்களைத் தேர்வுசெய்து வடமாநில கொள்ளையர்கள் கடந்த வாரம் பல லட்சம் ரூபாய் கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏடிஎம்களில் இருந்து 48 லட்சத்திற்கும் மேற்பட்ட பணம் கொள்ளையடிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகிய நிலையில், இந்த சம்பவம் ஏடிஎம் கொள்ளைக்குப் பெயர்போன மேவாட் கொள்ளையர்களால் நடத்தப்பட்டது என காவல்துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதுதொடர்பாக காவல்துறையினர் டெல்லி, ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்களுக்குச் சென்று கொள்ளையர்களைப் பிடிக்க தேடுதல் வேட்டை நடத்திய நிலையில், 23ஆம் தேதி ஹரியானா மாநிலத்தில் அமீர் ஆர்ஷ் என்ற  கொள்ளையனைக் கைது செய்தனர். இந்நிலையில், நேற்று மற்றொரு கொள்ளையன் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று நஜிம் ஹூசைன் என்ற கொள்ளையனை போலீஸார் கைது செய்துள்ளனர். 
 

 

சார்ந்த செய்திகள்