Skip to main content

நள்ளிரவில் வீடு புகுந்து தாக்கிய பெண் எஸ்.ஐக்கு ரூ.3 லட்சம் அபராதம்!

Published on 12/07/2018 | Edited on 12/07/2018
police


விசாரணை என்ற பெயரில் நள்ளிரவில் வீடு புகுந்து தாக்கிய பெண் எஸ்.ஐக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதித்து மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.

சென்னை, மேற்கு தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் முகமது அஷ்ரப். இவர் சென்னை மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது, என் மகனுக்கும் முன்னாள் போலீஸ்காரரான ஜபாருல்லாகான் மகளுக்கும் கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்து வைத்தேன். ஜபருல்லாகானும் அவரது மகனும் அளித்த ஆசை வார்த்தைகளை கேட்டு என் மகனும் அவர்களுக்கு வட்டிக்கு பணம் வாங்கி கொடுத்துள்ளான். அதை வைத்து அவர்களும் 20 லட்சம் மதிப்பில் வீடு வாங்கியுள்ளனர். மேலும், என் மகனின் மாத சம்பளத்தையும் ஏமாற்றி வந்தனர். இதை என் மகன் என்னிடம் சொல்லி அழுதான், பின்னர் அவன் வேலை சம்பந்தமாக வெளிநாட்டுக்கு சென்றான்.

 

 

இந்தநிலையில் ஜபருல்லாகானும் அவரது மகனும், ‘‘என்னை ஏன் உன் மகனை வெளிநாட்டுக்கு அனுப்பினாய் உன்னையும், உன் மகனையும் கொலை செய்து விடுவோம்’’ என்று மிரட்டி என்னையும் என் மனைவியையும் தாக்கினார்கள். இதன் பின் காஞ்சிபுரம் மகளிர் காவல்நிலைய எஸ்.ஐ மகிதா என்பவர் ஒரு நாள் இரவு எனது வீட்டுக்கு வந்து என்னை மிரட்டி எனது மகள் மற்றும் மனைவி ஆகியோரின் ஆடைகளை கிழித்து குடும்பத்தையே அவமாணப்படுத்தி மனித உரிமை மீறலுக்கு எதிராக செயல்பட்டனர். எனவே, மனித உரிமை மீறலுக்கு எதிராக செயல்பட்ட எஸ்.ஐ மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த இந்த வழக்கில் பெண் எஸ்.ஐ மகிதா மனித உரிமை மீறலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, அவருக்கு 3 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை அரசு பாதிக்கப்பட்டவரிடம் செலுத்திவிட்டு மகிதாவின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்து கொள்ள வேண்டும். மேலும், அவர் மீது துறைரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒழுங்கு நடவடிக்கை விசாரணை தொடங்குவதற்கு முன்பு அவரை பணியிட நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறி உத்தரவிட்டர்.

சார்ந்த செய்திகள்

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.