Skip to main content

4வது மாடியில் இருந்து குதித்த 2 மாணவிகள் – ஒருவர் பலி

Published on 09/12/2017 | Edited on 09/12/2017
4வது மாடியில் இருந்து குதித்த 2 மாணவிகள் – ஒருவர் பலி



சேலத்தில் பள்ளி மாணவிகள் இருவர் தங்கும் விடுதியின் 4வது மாடியில் இருந்து குதித்ததில் ஒரு மாணவி உயிரிழந்தார். மற்றொரு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

சேலம் சின்னகடை வீதியில் ஸ்ரீ சரவணபவன் உணவகம் மற்றும் தங்கும் விடுதி உள்ளது. தற்போது அந்த தங்கும் விடுதி பயன்பாட்டில் இல்லததால் பூட்டி வைக்கப்பட்டிருந்தது. இன்று காலையில் தங்கும் விடுதியின் நான்காவது மாடியில் மாணவிகள் இருவர் நின்று கொண்டிருந்தனர். இதனைக் கண்ட அருகிலிருந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மாணவிகளை கீழே இறங்குமாறு கூச்சலிட்டனர். போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். ஆனால் அந்த இரு மாணவிகளும் தீடிரென கட்டிடத்தின் 4வது மாடியில் இருந்து கீழே குதித்தனர்.



இதில் தலையில் பலத்த காயமடைந்த ஒரு மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிருக்குப் போரடிக் கொண்டிருந்த மற்றொரு மாணவியை அருகிலிருந்தவர்கள் மீட்டு, சேலம் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகலறிந்து வந்த போலீசார், அங்கு நடத்திய விசாரணையில், இருவரும் சேலம் நான்குரோடு பகுதியில் உள்ள செயிண்ட் மேரீஸ் பள்ளியில் படித்து வந்ததும், உயிரிழந்த மாணவியின் பெயர் ஜெயராணி என்பதும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர் சங்கர் நகரைச் சேர்ந்த கவிஸ்ரீ என்பதும் தெரியவந்தது.

சார்ந்த செய்திகள்