Published on 16/04/2020 | Edited on 16/04/2020
இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 12,750 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் கரோனாவுக்கு 420 பேர் பலியாகி உள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில், தேனி அரசு மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 18 பேர் குணமடைந்தனர். மார்ச் 31ம் தேதி 23 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், 23 பேரில் 18 பேர் தற்போது குணமாகியுள்ளனர். அதேபோல் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 5 பேர் குணமடைந்துள்ளனர். தஞ்சையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கும்பகோணத்தைச் சேர்ந்த ஒரு நபரும் குணம் அடைந்துள்ளார்.