Skip to main content

பிரபல கொடூர ரவுடி என்கவுண்டர்... பின்னணியிலுள்ள மர்மங்களை வெளிப்படுத்த வேண்டும்! -எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்!

Published on 11/07/2020 | Edited on 11/07/2020

 

Vikas Dubey up

 

சந்தேகத்திற்குரிய விகாஸ் துபே என்கவுண்டர் கொலையின் பின்னணியிலுள்ள மர்மங்களை வெளிப்படுத்த வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியுள்ளது.

 

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் முஹம்மது ஷஃபி வெளியிட்டுள்ள அறிக்கையில், விகாஸ் துபே என்ற உத்திரப்பிரதேசம் சார்ந்த மிகக் கொடூரமான பிரபல ரவுடி, நீதிநெறிமுறைக்கு புறம்பாகச் சந்தேகத்திற்குரிய வகையில் கொல்லப்பட்டதற்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவிப்பதுடன், பாகுபாடில்லாத நீதிவிசாரணை வாயிலாக, அதன் பின்னணியிலுள்ள மர்ம முடிச்சுகளை அவிழ்க்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் முன்வரவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

 

யோகி ஆதித்யநாத் எனும் ஆர்.எஸ்.எஸ். சார்ந்த சாமியார் ஆளும் உத்திரப்பிரதேசத்தில் காட்டு தர்பார் நடப்பதுடன், மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி, நீதிநெறிமுறை, சட்டபூர்வ விசாரணை ஆகியவைக் காலடியில் போட்டு மிதிக்கப்படுகின்றன என்று அவர் கண்டனம் தெரிவித்தார்.

 

கொடூர குண்டர் கும்பலின் தலைவன் விகாஸ் துபேவைக் கைது செய்யவந்த காவல்துறையினர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தி 8 காவல் அதிகாரிகளைச் சுட்டுக்கொன்று ஒரு வாரகாலமாக தலைமறைவான நிலையில், உஜ்ஜைன் நகரில் விகாஸ் துபே காவல்துறையிடம் சரணடைந்தார். இது தொடர்பாக காவல்துறை தரப்பு சொல்வதாவது, "கடந்த வெள்ளியன்று விகாஸ் துபேவைக் கைது செய்து உஜ்ஜைனிலிருந்து கான்பூருக்கு காவல்துறை வாகனத்தில் அழைத்துச் செல்லும்போது வாகனம் கவிழ்ந்ததாகவும், காயமுற்ற ஒரு காவலரின் துப்பாக்கியைப் பறித்துக் காவலர்கள் மீது தாக்குதல் நடத்த விகாஸ் முயன்றபோது, தற்காப்புக் கருதி காவல்துறையினர் என்கவுன்டர் செய்து கொன்றதாகவும் சொல்லப்படுகிறது.  காவல்துறையிடம் ஏற்கனவே சரணடைந்த ஒரு குற்றவாளி காவல்துறை கட்டுப்பாட்டிலிருந்து ஏன் தப்பிக்க முயலவேண்டும்? என்ற ஐயம் அனைவரின் மனதிலும் தோன்றுவதும் இயல்பே. இந்த நம்பகத்தன்மை இல்லாத எழுதித் தயாரிக்கப்பட்ட கட்டுக்கதை பற்றி ஓய்வுபெற்ற ஐ.பி.ஸ். அதிகாரிகளே கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

 

விகாஸ் துபே சரணடைந்த பின் கைது செய்யப்பட்டு, கான்பூர் கொண்டுச் செல்லப்பட்ட காவல்துறைக் குழுவைப் பின்தொடர்ந்து சென்ற ஊடகவியலாளர்களின் கூற்றுப்படி, "இந்த என்கவுண்டர் என்பது அரங்கேற்றப்பட்ட ஒரு நாடகமே", என்பதாகும். என்கவுண்டர் செய்யப்படுவதற்கு சற்றுமுன்பு விகாஸ் துபே அழைத்துச் செல்லப்பட்ட வாகனத்தைத் தொடர்ந்த பிற காவல்துறை வாகனங்கள் பின்தங்கும் வகையில் இடைமறித்து நிறுத்த காவல்துறையால் நிர்பந்திக்கப்பட்டன." என்று ஊடகவியலாளர் தெரிவிக்கின்றனர்.

 

ஊடகவியலாளரின் வாகனங்கள் சோதிக்கப்பட்ட பின் செல்ல அனுமதிக்கப்பட்டன. இதற்கிடையில் எதிர்பாராதவாறு விகாஸ் துபே அழைத்துச் செல்லப்பட்ட வாகனம் கவிழ்ந்ததாகவும், விகாஸ் துபே என்கவுண்டர் செய்யப்பட்டதாகவும் ஊடகவியலாளருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குண்டர்கள் தலைவனின் ஐந்து கூட்டாளிகள் ஏற்கனவே பல என்கவுண்டர்களில் கொல்லப்பட்டுள்ளனர் என்பது அறிந்ததே.

 

பல்வேறு கொடூரமான குற்றங்களில் தொடர்புடைய விகாஸ் துபே பிரபல அரசியல்வாதிகளின் முழு ஆதரவோடு கடந்த இருபது ஆண்டுகளாக கொடிகட்டிப் பறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. என்கவுன்டர் என்ற சாக்கில் சுட்டுக்கொன்றதால் விகாஸ் துபேவுடன் நீண்டகாலத் தொடர்பிலிருந்த ஊழல் அரசியல்வாதிகளை காவல்துறை ஆட்சியாளர்களின் தூண்டுதலால் காப்பாற்றியுள்ளது கண்கூடு.

 

ஜனநாயத்தின் மீதும் மதச்சார்பின்மையின் மீதும் அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்துள்ள அனைவரும், உ.பி. மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட தயக்கமில்லாமல் எழுச்சிகொண்டு முன்வரவேண்டும் எனத் தெரிவித்தார்.

 

http://onelink.to/nknapp

 

மேலும், விகாஸ் துபே என்கவுண்டர் கொலை தொடர்பாக, இப்போது பதவியிலிருக்கும் உச்சநீதிமன்ற நீதிபதியைக் கொண்டு நீதிவிசாரணை நடத்தி, பா.ஜ.க. உள்ளிட்ட பல்வேறு ஊழல் அரசியல்வாதிகளுடன் மோசமான கொடும் குற்றவாளி  துபே கொண்டிருந்த பாவமிக்க தொடர்புகளை வெளிப்படுத்துவதோடு, நீதிநெறிமுறைக்குப் புறம்பாக நடத்தப்பட்ட போலி என்கவுன்டரின் மர்ம முடிச்சுகளை அவிழ்த்து, உண்மைநிலையை வெளிக்கொண்டுவர சம்மந்தப்பட்ட அதிகாரிகள் முன்வரவேண்டும். இவ்வாறு முஹம்மது ஷஃபி கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.